இலங்கை அகதி உள்ளிட்ட இருவருக்கு ஏற்பட்ட நிலை
08 Jun,2018
திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் கைத்தொலைபேசியை பறித்துச் சென்ற இலங்கை அகதி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லை நகரைச் சேர்ந்த 21 வயதுடைய நிஷா என்ற கல்லூரி மாணவரும், மற்றொருவர் இலங்கை அகதி என தெரியவந்துள்ளது.திருச்சி பெரியகடைவீதி சுகாதார தெருவை சேர்ந்த 19 வயதுடைய சுரேஷ்குமார் கோட்டை ஸ்டேஷன் வீதியில் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது அவ்வழியாக வந்த 2 இளைஞர்கள் சுரேஷ்குமாரிடம் பேச்சு கொடுத்து, அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.குறித்த இளைஞர்களை மடக்கிப்பிடித்த பொது மக்கள் கோட்டை குற்றப்பிரிவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.