பெரிய அளவு எரிகல் ஒன்று வானில் இருந்து எரிந்து விழுந்தது - VIDEO
05 Jun,2018
விஞ்ஞானிகள் மூன்றாவது முறையாக பூமியின் ஒரு நேரடி மோதல் போக்கில் வந்த விண்கல்லை கண்டு உள்ளனர். இதற்கு முன் 2008 மற்றும் 2014 ஆம் ஆண்டு இதே போன்று பெரிய அளவு விண்கல் பூமிக்கு வந்துள்ளது.
2018 LA, சந்திரனின் கோளப்பாதையில் சனிக்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஞாயிறு இரவு பூமியை நோக்கி வந்ததாக நாசா அறிவித்தது.
நாசா மற்றும் விண்கல் கண்காணிப்பாளர்கள் விரைவாக இது ஒரு 2 மீட்டர் அளவு உள்ள பாறை என தீர்மானித்தனர். மிகவும் சிறியதாக இருந்தது எந்த ஆபத்தும் இல்லை என கூறினர். அது போட்ஸ்வானா மீது சனிக்கிழமை மாலை வானில் எரிந்து வந்து கொண்டு இருந்தது. எட்டு மணி நேரத்திற்கு முன் இருந்து அது கவனிக்கப்பட்டது.
தென் ஆபிரிக்காவில் எல்லையில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட இந்த எரிகல் விழும் காட்சி வீடியோ யுடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஃபயர்பால் விரைவாக இறங்கி வரும் காட்சி இடம் பெற்று உள்ளது