மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவாக வெளியிட்ட ஆசிரியர்!
04 Jun,2018
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு மாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தோடா எனும் ஊரில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அந்த ஆசிரியர் பெயர் வாசிம் ஹுசைன் பட். இவர் சுகாதார பள்ளியில் படிக்கும் மாணவியுடன் நெருங்கிப் பழகி திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.
அதனை வீடியோ எடுத்த வாசிம் தினமும் அதனைக் காண்பித்து மிரட்டி அம்மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் மாணவிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து மாணவியுடன் தான் எடுத்த பாலியல் வீடியோவை சமூக வலைதளங்களுக்கு இரையாக்கியிருக்கிறான் வாசிம். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பெற்றோர் விசாரித்ததால் உண்மையைக் கூறியிருக்கிறார். அதனையடுத்து மாணவியின் பெற்றோர் க்ரிஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆசிரியரை கைது செய்த காவல்துறை விசாரணையின் போது வாசிம் இது போல பல மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.
வாசிமிடம் மேலும் விசாரணை தொடர்கிறது.