கேரளா ஸ்டைல்

02 Jun,2018
 

 
கப்ப மற்றும் மீன் குழம்பு

 
 
 
கப்ப - தேவையான பொருட்கள்
மரச்சீனிக்கிழங்கு – 1கி.கி
சின்ன வெங்காயம் – 5
தேங்காய் (துருவியது)
மஞ்சள் பொடி - ண தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
கப்ப – செய்முறை
மரச்சீனிக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அந்தத் துண்டுகளை ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் அதிகப் படியான நீரை வடிகட்டி எடுத்து விட்டு, பின்னர் உப்பு கறிவேப்பிலை சேர்க்கவும். அதோடு தேங்காய், மஞ்சள், சீரகம், யாவற்ரையும் சேர்த்து அரைத்து வைத்த விழுதினைச் சேர்க்கவும். நன்கு கலக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். பின்னர் எல்லாவற்றையும் நன்கு கலந்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
இந்த மரச்சீனிக்கிழங்கோடு மீன் குழம்பு வைத்து சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மீன் கறி தேவையான பொருட்கள்
மீன் – சுத்தம் செய்து நறுக்கியது.
சின்ன வெங்காயம் 8 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
தேங்காய் பால் - ண தேக்கரண்டி
காம்போஜ்(குடம்புளி) – 4 துண்டுகள்
பச்சை மிளகாய் – 8 (நீளவாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை
பூண்டு (நறுக்கியது) – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி – 1 தேக்கரண்டி
வற்றல் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ண தேக்கரண்டி
வெந்தயத்தூள் - ண தேக்கரண்டி
உப்பு
எண்னெய்
மீன் கறி – செய்முறை
ஒரு மண் பாத்திரத்தில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் இஞ்சி பூண்டு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்னர் அதோடு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். சிறிது கிளறி விட்டு பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து மறுபடியும் கிளறி விடவும். அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் வெந்தய தூள் சேர்த்து நன்கு கிளறவும்.   
இப்போது மூன்று கப் நீர் ஊற்றி அதோடு காப்போஜ்களை (குடம்புளி) துண்டுகளைச் சேர்க்கவும். இப்போது உப்பும், மீன் துண்டுகளையும் சேர்த்து மெதுவாக கிளறிவிட்டு கொதிக்க விடவும். பாதியளவு வற்றி கெட்டியானதும் அதில் தக்காளி துண்டுகளைப் போட்டுமேலும் சிறிது நேரம் வேக விடவும். அதன் பின்னர் தேங்காய் பால் ஊற்றி மெதுவாக கிளறவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
இப்போது சுவையான மீன்கறி பரிமாற தயாராக உள்ளது. நீங்கள் அதனை கப்பவோடு சேர்த்து உண்ணலாம். 
h
கேரளா மட்டன் ரோஸ்ட் : செய்முறைகளுடன்...!
 
தேவையான பொருட்கள்:
மட்டன் – அரை கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பொட்டுக்கடலை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டு – 6 பெரிய பற்கள்.
செய்முறை :
மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
சுத்தம் செய்த மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!
 
கேரளா முட்டை  மோலி  சூப்பர் ..... காரமும் குறைவாத்தான் இருக்கும்.....!  

 
 
 
தேவையான பொருட்கள்;
முதலில் செய்யவேண்டியது:
பிடித்த மீன் மீடியம் சைஸ் - 2 ( ஐவாவல், கறிமீன், பாரை.சீலாமீன் துண்டு என்றுஏதாவது )
சிறிது மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,உப்பு,லெமன் ஜூஸ் சேர்த்து விரவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து விரவிய மீனை தவாவில் சிறிது எண்ணெய் விட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.முறுக பொரிக்க வேண்டாம்.
இனி மசாலா செய்ய:
கடாயில்  மீன் பொரித்த எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,சோம்பு, கருவேப்பிலை சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்து வரும் பொழுது நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.நன்கு மசியட்டும்.அத்துடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,சிறிது கரம் மசாலா, மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கலந்து சிறிது பிரட்டவும்.
அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் சிறிது சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.எண்ணெய் வெளியே வரும் வரை சிம்மில் வைக்கவும்.
தயார் ஆனவுடன் அடுப்பை  அணைத்து மசாலாவை ஆற விடவும்.
 
 
வாழையிலையை நன்கு அலசி துடைத்து வைக்கவும்.
வாழையிலையில் தயார் செய்த மசாலா வைத்து அதன் மேல் மீன் வைத்து மீண்டும் மீன் மேல் சிறிது மசாலா வைத்து வாழையிலை யை மடித்து டூத் பிக் வைத்து பிரிந்து விடாதபடி செய்யவும்.
இதனை இப்படியே தவாவில் வைத்து சுட்டும் எடுக்கலாம்.
 
 
 
அல்லது தயார் செய்த வாழையிலை மடிப்பை அலுமினிய ஃபாயில் கொண்டு கவர் செய்யவும். கவர் செய்ததை மீண்டும் இட்லி பாத்திரத்தில் வைத்தோ அல்லது ஸ்டீமரில் வைத்தோ ஆவியில்  வேக விட்டு எடுக்கவும்.
 
வெந்த பின்பு கவனமாக பிரித்தால்
கேரளாவின் மீன் பொளிச்சது தயார்.
சூப்பராக வாழையிலை மணத்துடன் இருக்கும். ருசியும் அசத்தலாக இருக்கும்.
 
 
 
 
கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
தேவையான பொருட்கள்:
மட்டன் – -1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – -2 (நறுக்கியது)
இஞ்சி – -1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு – -5 பல் (நறுக்கியது)
தேங்காய்ப் பால் – -1/2 கப்
பட்டை – -1
ஏலக்காய் – -3
கிராம்பு – -3
சோம்பு – -1 டீஸ்பூன்
கசகசா – -1 டீஸ்பூன்
மல்லித் தூள் – -1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – -2 டீஸ்பூன்
முந்திரி – -11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
மிளகுத் தூள் – -1 டீஸ்பூன்
வினிகர் – -1 டீஸ்பூன்
எண்ணெய் – -தேவையான அளவு
கொத்துமல்லி – -சிறிது (நறுக்கியது)
உப்பு – -தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.
பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய்ப் பால், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி! இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
Edited February 17 by நவீனன்
 
கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு
இன்று கேரளாவில் மிகவும் பிரபலமான உளி தீயல் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய புளிக்குழம்பை எப்படி செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.
 
   
 
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 1/2 கப் (தோலுரித்தது)
புளிச்சாறு - 1/4 கப்
 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு:
துருவிய தேங்காய் - 1/2 கப்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு :
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2
 
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு, குறைவான தீயில் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள்,  மிளகாய் தூள் மற்றும்  சீரகப் பொடி சேர்த்து வதக்கி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதப்பி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளிச்சாறு ஊற்றி, குழம்பு சற்று கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது கெட்டியாகி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால், கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு ரெடி!!!
ஆத்திர அவசரத்துக்கு காய்கறி இல்லையென்றால் வெங்காய குழம்பும், வெந்தய குழம்பும்தான் கை கொடுக்கும்......!  
வெண்காய அறுவடை முடிந்தால் வீட்டில் வெண்காய குழம்பு பொரியல் என்று ஒரே வெண்காய அயிட்டம் தான்.அந்தக் காலங்களில் வியர்வை கூட வெண்காய மணமாகத் தான் இருக்கும்.
சூப்பரான மலபார் இறால் கறி
 
ஆப்பம், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மலபார் இறால் கறி சூப்பராக இருக்கும். இன்று மலபார் இறால் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
 
 
தேவையான பொருள்கள் :
இறால் - 300 கிராம்
மாங்காய் - 1
இஞ்சி - 1
பச்சை மிளகாய் - 5
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கிரேவி செய்ய :
தேங்காய் - 1
] மிளகாய்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயத்தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை  :
இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.
மாங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
இஞ்சி ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கிரேவிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு மண் பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மாங்காய், இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில் வைத்து மூடிவைத்து சிறிது வேக விடவும்.
இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும். கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
இப்போது சுவையான இறால் கறி பரிமாறத் தயாராகிவிடும்.
தெருக்கடை உணவுகள் - கேரளா ஸ்பெஷல்
 
 
 
 
தெருக்கடை உணவுகளுக்கே என  பிரத்யேக சுவையுண்டு. அதனால்தான்,   நட்சத்திர ஓட்டல்களில்கூட ‘தெருக்கடை உணவுத் திருவிழா’, `தட்டுக்கடை ஃபெஸ்டிவல்’  போன்ற பெயர்களில் உணவுத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல; உலக நாடுகள் பலவற்றில் தெருக்கடை உணவுகளைத் தேடித் திரிந்து சுவைக்கும் உணவு ரசிகர்கள் உண்டு. பயணிகளைக் கேட்டாலே போதும்...  இதுபோன்ற சிறப்பு உணவுகளைப் பற்றி நாவினிக்கப் பட்டியலிடுவார்கள்.  
அந்த வகையில் கேரளாவில் பிரபலமாக விளங்கும் தெருக்கடை உணவுகளை வீட்டிலேயே தயார் செய்யும் விதத்தில் படங்கள், வீடியோக்களுடன் அளிக்கிறார்  ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.  
 
கொழிக்கால்
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு -  அரை கிலோ (தோல் சீவி, நீளவாக்கில் ஃபிங்கர் சிப்ஸ் போல மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்)
கடலை மாவு -  கால் கப்
அரிசி மாவு - அரை கப்
பச்சை மிளகாய் -  2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
கடலை மாவுடன் அரிசி மாவு,  பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை,  மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு  சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மரவள்ளிக்கிழங்குத் துண்டுகள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவுப் பதத்துக்குப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவைப் பக்கோடாக்கள் போல பிடித்துப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான கொழிக்கால் ரெடி.
 

பழம் பொரி
தேவையானவை:
நடுத்தரமான நேந்திரம்பழம்  -  5
மைதா மாவு - ஒரு கப்
சர்க்கரை - 1/3 கப்
அரிசி மாவு - கால் கப்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
சமையல் சோடா (ஆப்ப சோடா)  -  கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நேந்திரம்பழத்தைத் தோல் நீக்கி, பஜ்ஜிக்கு நறுக்குவது போல நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவுடன் அரிசி மாவு, மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அல்லது `விஸ்க்’கால் சற்றுக் கெட்டியாக இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பழத்துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப்போட்டுப் பொரித்தெடுக்கவும். 
 

புட்டு கடலைக்கறி
தேவையானவை:
புட்டு செய்ய:
புட்டு மாவு (அரிசி மாவு அல்லது கோதுமை மாவு) - 2 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
கடலைக் கறி செய்ய:
கறுப்புக் கொண்டக்கடலை - ஒரு கப் (ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைக்கவும்)
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2  டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்
கறிவேப்பிலை - கால் கப்
கொத்தமல்லித்தழை - கால் கப்
கடுகு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
புட்டு மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கைவிரல்களால் பிசிறவும். உருளை வடிவ புட்டுக் குழலில்  சிறிதளவு மாவு, தேங்காய்த் துருவல் என மாற்றி மாற்றி வைத்து நிரப்பவும். இதை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். புட்டு தயார். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  அதனுடன் கறிவேப்பிலை,  வேகவைத்த கடலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் புட்டுடன் பரிமாறவும். 
 

உன்னக்காய்
தேவையானவை:
நேந்திரம்பழம் - 3 (முழுவதும் பழுக்காதது)
முந்திரி - 6 (உடைக்கவும்)
திராட்சை - 5
நெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
நேந்திரம்பழத்தைத் தோலுடன் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் தோலை நீக்கி விட்டு, நன்கு கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்துக்கு மசிக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி திராட்சை, முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதுவே பூரணம். கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு மசித்த பழக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கவும். கையில் நெய் தொட்டுக்கொண்டு பழ உருண்டைகளைக் கிண்ணம் போல செய்து, நடுவே அரை டீஸ்பூன் பூரணம் வைத்துக் கையால் அழுத்தி முட்டை வடிவில் மூடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துப் பழ உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதைச் சூடாகப் பரிமாறவும். 
 

உன்னியப்பம்
தேவையானவை
பச்சரிசி - ஒரு கப்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த வாழைப்பழம் - ஒன்று
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய் - 4
நெய் - அரை கப்
செய்முறை
அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, கெட்டியாக அரைத்தெடுக்கவும் (அரைக்கும்போது வாழைப்பழம் சேர்த்துக்கொள்ளவும்). வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கெட்டியாகக் காய்ச்சி இறக்கவும். அதனுடன் அரைத்த அரிசி கலவை சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கலக்கவும். இதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும். பிறகு இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பணியாரக்கல்லைக் காயவைத்து, குழிகளில் சிறிதளவு நெய்விட்டு உருக்கி, பாதி குழி அளவுக்கு மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு, மறுபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.  
 

குலுக்கி சர்பத்
தேவையானவை:
சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழியவும்)
தோல் சீவி துருவிய
இஞ்சி - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் - கால் டீஸ்பூன்
புதினா இலைகள் - 3
சர்க்கரை - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - சிறிதளவு
செய்முறை:
சப்ஜா விதையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு, சப்ஜா விதைகளைத் தனியாக எடுத்து வைக்கவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய், புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். பாட்டில் அல்லது ஷேக்கரில் ஊறவைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சைச் சாறு, இஞ்சி  - பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு குலுக்கவும். அதனுடன் பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து மீண்டும் குலுக்கி, சர்பத்தைப் பரிமாறவும்.
கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி
கேரளா மாநிலத்தில் சக்கர உப்பேறி மிகவுல் பிரபலம். இன்று இந்த சக்கர உப்பேறியை வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
 
 
தேவையான பொருட்கள் :
நேந்திரங்காய் - 3,
வெல்லம் பொடித்தது - 2 கப்,
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்,
ஏலக்காய்ப்பொடி - அரை டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
நெய் - கால் கப்.
 
செய்முறை :
நேந்திரங்காய்களை நீளவாக்கில் சற்று கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, நறுக்கிய துண்டுகளை பொரித்தெடுங்கள்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கெட்டிப் பாகு ஆனதும் (பாகு பூத்து வரும்போது), பொரித்து வைத்த நேந்திரங்காய் துண்டுகள், ஏலக்காய்க்காய், சுக்குதூள், நெய் ஆகியவற்றை பாகில் கொட்டி, நன்கு கிளறி இறக்குங்கள்.
வத்தல் உதிர், உதிராக வந்துவிடும். (நேந்திரங்காயை வேகவைத்தும் இதை செய்வார்கள். இதன் செய்முறை கேரளாவில் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது).
வெள்ளரி மோர் கறி
 
 
கோடைக்காலத்திற்கேற்ற சமையல். அடிக்கடி மோரு கறி செய்வதுண்டு, இங்கே பகிர இன்று தான் முடிந்தது.இது போல் வெண்பூசணியில் செய்யலாம்.
 
 
 தேவையான பொருட்கள் ;-
வேக வைக்க:-
வெள்ளரி - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய் - 1
தண்ணீர் - 1 கப்
உப்பு தேவைக்கு.
அரைக்க :-
தேங்காய் - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தாளிக்க:-
தேங்காய்  எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம்  -  5
கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.
செய்முறை:-
 
 காய் வெட்டாக உள்ள வெள்ளரியை தோல் சீவிக் கொள்ளவும்.
 
 நன்கு அலசி எடுக்கவும்.
 
 நான்காக வெட்டி விதை நீக்கிக் கொள்ளவும்.
 
 
 
 சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 
 
 
 மஞ்சள் தூள், கீறிய மிளகாய் 1  ,தேவைக்கு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
 
 
அரை கப்   தேங்காய்த்துருவல் ,1/2 தேக்கரண்டி சீரகம்,1 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
 
 
 
 
அரைத்து தயாராய் இருக்கட்டும்.
 
 வெள்ளரி நன்கு வெந்து வரும்.
 
 அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 
 
 
 நன்கு கொதித்து பச்சை வாடை அடங்கட்டும்.
 
 அடுப்பை அணைக்கவும்.
 
 கெட்டி தயிர் ஒரு கப் சேர்க்கவும்.
 
 கலந்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
 
 ஒரு கடாயில் தேங்காய்  எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,வெந்தயம், கருவேப்பிலை,கிள்ளிய வற்றல்,நறுக்கிய சின்ன வெங்காயம்   சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 
 தயார் ஆன  வெள்ளரி மோர் கறியில் கொட்டவும்.
 
 சுவையான சத்தான ஆரோக்கியமான வெள்ளரி மோர் கறி தயார்.
சூடான சோறு பக்க உணவுகளுடன் பரிமாறவும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies