மனைவியின் கள்ள உறவு: கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!!
02 Jun,2018
கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 40 வயதுடைய ராஜூ என்பவர் மனைவியின் செயலால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவியான மாலா என்பவர் வேறு ஒரு ஆணுடன் தகாத உறவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் கணவன் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தையும், நுண்கடன் மூலம் பெற்ற பணம் மாலா குறித்த ஆணுக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையிலேயே வெளிநாட்டிலிருந்த கணவன் நாட்டுக்கு வந்ததும் இந்த விடயங்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது.
மேலும் நுண்கடன் நிதி நிறுவனங்களில் இருந்து வீடு தேடி வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது அவருடைய மனைவியும், குறித்த ஆணும் ஒன்றாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.