அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மைய வாரங்களில் மிகப் பாரியளவில் ஊடகங்களில் இடம் பிடித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் தென்கொரியாவில் கால்பதித்து தென்கொரிய அதிபருடன் கட்டி அணைத்து உறவு கொண்டாடியமை, வடகொரியா அணுசக்தி செறிவூட்டலை நிறுத்த சம்மதித்தமை, எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கப்பூரில் வடகொரிய தலைவர் கிம் - ட்ரம்ப் உச்சிமகாநாடு 2018 ஆனி 12ம் திகதி நடைபெறும் என்ற உறுதிப்பாடு யாவும் அதிபர் ட்ரம்பின் கீர்த்தியை உயர்த்தியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்க பிரஜைகளும் வடகொரியா அரசினால் விடுவிக்கப்பட்டு அமெரிக்கா வந்தடைந்துள்ளனர். அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியான அவரின் மனைவியுடன் விடுவிக்கப்பட்ட மூவரை சுமந்துவந்த விமானத்துக்குள் சென்று வரவேற்றனர். அமெரிக்க அதிபர் மீண்டும் அமெரிக்காவில் பிரபலம் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ட்ரம்புக்கு சமாதானத்துக்காக நோபல்பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்த ஆரவாரம் அடங்கு முன்னர் 2018 வைகாசி இரண்டாம் வாரம் ட்ரம்ப் பிறிதொரு அதிர்ச்சியான தீர்மானமொன்றை வெளியிட்டார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான் அணுசக்தி செறிவாக்கல் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அமெரிக்கா ஈரானுக்கெதிரான பொருளாதார தடைகளை மீண்டும் அமுல்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார். 2015ம் ஆண்டில் பூர்த்திசெய்து ஐந்து பாதுகாப்புச் சபை நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனியும் இணைந்து வடகொரிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என பொதுவாக கூறப்பட்டாலும் இந்த ஒப்பந்தம் ஆங்கிலத்தில் துடிiவே ஊடிஅயீசநாநளேiஎந ஞடயn டிக ஹஉவiடிn என அழைக்கப்படுகிறது. இதனை விரிவான நடவடிக்கைக்கான கூட்டுத்திட்டம் எனக் கூறலாம். இந்த ஒப்பந்தம் விரிவானது சுருக்கமாக கூறினால் ஈரான் அணுவாயுத செறிவாக்கல் நடவடிக்கைகளை நிறுத்துவதென்றும், பதிலாக ருசூ, ருளுஹ, நுரு ஆகியவை பொருளாதார மற்றும் தடைகளை தளர்த்துவதெனவும் ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2016 வரை பொருளாதார தடைகளால் ஈரான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்கமுடியவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட 100 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டதால் பொருளாதாரம் நலிவடைந்தது. ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர் ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகள் ஈரானுக்குள் இயங்கிய அணுசக்தி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் யாவற்றையும் பரிசோதனை செய்து ஈரான் அணுச்செறிவாக்கல் திட்டங்களை நிறுத்தியுள்ளதென உறுதிப்படுத்தி ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பித்தது அதன் பயனாக ஒப்பந்தத்தில் விதந்துரைத்தபடி பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன. 2017 ஆரம்பத்தில் இருந்து ஈரான் மீண்டும் சர்வதேச வர்த்தகத்தை ஆரம்பித்தது. எண்ணெய் ஏற்றுமதியால் பெரும் வெளிநாட்டுச் செலவாணியை சம்பாதித்தது. முடக்கப்பட்ட 100 பில்லியனுக்கு மேற்பட்ட சொத்துக்கள் ஈரானுக்கு கிடைத்தது. ஈரான் பொருளாதாரம் மீண்டும் செழிக்க தொடங்கியது. மேற்கு நாடுகள் குறிப்பாக பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, ஈரானுடன் இருதரப்பு வர்த்தகத்தை ஆரம்பித்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானுடனான ஏற்றுமதி வர்த்தகம் பயன்களை அள்ளித்தந்தது. அமெரிக்க அதிபரின் பிரகடனம் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. அமெரிக்க அதிபர் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த போது இந்த ஒப்பந்தம் பழுதாகி துர்நாற்றமெடுக்கும் ஒப்பந்தம் என்றார். பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் - ட்ரம்பின் முடிவு வருத்தமளிக்கின்றது என கருத்து தெரிவித்தனர். ஐ.நா. பொதுச்செயலர் ட்ரம்பின் முடிவு ஏமாற்றமளிக்கிறது என்றார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முயற்சியால் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியென ரைம்ஸ் நியூஸ்வீக் சஞ்சிகைகள் முன்னர் பாராட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபரின் தீர்மானத்தை இஸ்ரேல், சவூதி அரேபியா உற்சாகமாக வரவேற்றுள்ளன. சவூதி அரேபியாவும் ஈரானும் அராபிய வட்டகைக்குள் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டியில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. முடியரசு, குடியரசு வேறுபாட்டுக்கப்பால் அராபிய பிராந்தியத்தில் இடம்பெறும் சச்சரவுகளில் வெவ்வேறு தரப்பினருக்கு ஆயுத உதவி, பொருளாதார உதவி, தார்மீக உதவிகளை வழங்குகின்றனர். அமெரிக்கா, சிரியாவில் அசாத் ஜனாதிபதியின் ஆட்சியை மாற்றவேண்டும் என்கின்ற அட்டவணையில் செயலாற்றும் போது சவூதி அமெரிக்காவிற்கு ஆதரவாக அசாத் ஆட்சியை எதிர்க்கும் தரப்பினருக்கு ஆதரவு தருகின்றது. ஈரான் அசாத் ஆட்சிக்கு ஆயுத நிதி உதவி வழங்குகின்றது. ஈரான் ஹிஸ்புல்லாவுக்கு தீவிரமான ஆதரவு அளிக்கின்றது. இவ்வாறு சிரியாவில் மட்டுமல்ல எமன் நாட்டிலும் இதே விதமாக எதிரும் புதிருமாக செயற்படுகின்றன. இப்பின்னணியில் 2017ஆம் ஆண்டு ஆனிமாதம் சவூதி அரேபியா திடீரென கட்டார் நாட்டுடன் இராஜதந்திர தொடர்புகளை துண்டித்து தரை, வான், கடல் முற்றுகையை ஏற்படுத்தியது. கட்டார், ஈரான் நாட்டுடன் சிறந்த உறவுகளைப் பேணிவருகின்றது. ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு ஆதரவு அளிக்கின்றது. சவூதி இராஜதந்திர தொடர்புகளை துண்டிக்கும் போது கட்டார், பயங்கரவாதத்துக்கு துணை போகின்றது என குற்றஞ்சாட்டியது. இஸ்ரேலைப் பொறுத்தமட்டில், பிராந்தியத்தில் தீவிரமாக இஸ்ரேலின் இருப்பை எதிர்த்த தலைவர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன், லிபியாவின் கேணல் கடாபி யாவரும் வரலாறாகிவிட்டனர். எஞ்சியிருக்கும் இரண்டு நாடுகள் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலானவை. சிரியாவும் ஈரானும் தீவிரமாக இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகளானபடியால் இஸ்ரேல், சிரியாவில் ஈரானின் தளங்கள் எனக் கருதப்படும் நிலைகள் மீது குண்டுமாரி பொழிந்துள்ளன. ஈரான், சிரியா நாடுகளைப் பொறுத்த வரையில் சிரியா பலம் பொருந்திய நாடல்ல. ஈரான் எண்ணெய் வளம், கணிசமான சனத்தொகை, விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் பாரிய முன்னேற்றம், அணுஆயுத உற்பத்தியில் ஈரான் கூடிய ஆற்றல் யாவற்றினாலும் இஸ்ரேலைப் பொறுத்தமட்டில் ஈரான் பிரதான எதிரியாகும். இதனால் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த மறுகணமே இஸ்ரேல் பிரதமர் நெத்தனியாகு அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் ஒப்பந்த விலகல் தீர்மானம் ஈரான் நாட்டினுள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் எதிர்வலைகளை பார்ப்பது அவசியமாகும். அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயோத்துல்லா கொமேனி அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஈரானின் தலைநகரும் டெஹ்ரான் உட்பட பிராந்திய நகரங்களிலும் பாரிய அமெரிக்க எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்கா ஒழிக, இஸ்ரேல் ஒழிக என்ற குரலே எங்கும் கேட்கிறது. அயோத்துல்லா கொமெனியின் ஆதரவாளர்கள் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் நிராகரித்து மீண்டும் ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என கோஷமிடுகின்றனர்.
ஜனாதிபதி ரௌகானி ஒப்பந்தம் கைச்சாத்தாக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டதனால் கடும்போக்காளர்களின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி ரொஹனி, ஈரானினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் என்பது யதார்த்தமானது. ஈரானிய மக்களும் பொருளாதார சுமைகளால் பாதிப்படைந்த படியால் ஜனாதிபதியின் இராஜதந்திர நடவடிக்கைகட்கு ஆதரவளித்தனர். அயோத்துல்லா கொமேனியும் கடும் கோட்பாளர்களும் ஜனாதிபதியின் ஒப்பந்தம் உருவாகும் முயற்சிகளுக்கு தடைபோடவில்லை. அதுவே ஜனாதிபதி ரௌகானியின் வெற்றி எனக் கருதப்பட்டது.
பிரான்சிய கம்பனிகளில் ரோட்டல் (கூடிவயட) என்கின்ற எண்ணெய் வாயு தொழிற்றுறை மெகா கம்பனி, ஈரானில் அமைந்துள்ள உலகில் மிகப்பெரிய பெட்ரோலியம் வாயு வயல்களை அபிவிருத்தி செய்வதற்கு ஈரான் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்தது. அமெரிக்கா தடைகளை அறிவித்தபடியால் பிரான்சிய கம்பனி மட்டுமல்ல ஜேர்மனிய, பிரிட்டிஷ் கம்பனிகளும் திரிசங்கு சொர்க்க நிலையில் உள்ளன. அமெரிக்கா அறிவித்தலின்படி நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் ஐரோப்பிய கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளை முற்றுப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான விலகல் முடிவை ஏனைய ஐரோப்பிய நாடுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் இக்கம்பனிகள் அமெரிக்காவுடன் நிதிப்பரிவர்த்தனை செய்வதில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். எவ்வாறெனில் பிரான்சிய கம்பனிகள் அமெரிக்காவுடனான நிதிப்பரிவர்த்தனையில் 90ரூ வரை சம்பந்தப்படுகின்றன. இச்சூழ்நிலையில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை பிரான்சிய கம்பனிகள் இலகுவில் கைவிட முடியாது. இச்சூழ்நிலையில் அமெரிக்கா காலக்கெடு விதித்ததின் பிரகாரம் பிரான்சிய கம்பனிகள் உட்பட ஐரோப்பிய கம்பனிகள் செயல்பட வேண்டும் என்பது ஒரு கட்டாயமாகும்.
அமெரிக்கா ஈரானுக்கெதிராக விதித்த பொருளாதாரத் தடைகளை விசேடமாக ஈரானின் எண்ணெய், வாயு ஏற்றுமதிகளை குறிவைக்கின்றது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருமா என்கின்ற கேள்வி எழுகிறது. அமெரிக்கா இவற்றை அமுல்படுத்த 'ஆறுதல் காலம்' ஒன்றை அறிவித்துள்ளது. இத்தடைகள் 90 இலிருந்து 180 நாட்களுக்குள் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது. ஈரான் அணுஆயுத ஒப்பந்தம் கைச்சாத்தான பின் ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட ஐரோப்பிய கம்பனிகள் 90 – - 180 நாட்களுக்குள் வர்த்தக நடவடிக்கைகளை முற்றுப்படுத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன் எவ்வாறு ஐரோப்பிய கம்பனிகளை பாதுகாக்கலாம் என ஆராய்ந்து வருகின்றது. 2015 இல் கைச்சாத்தான ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதாக அறிவித்தாலும் ஈரான் உத்தியோக பூர்வமாக இன்னும் ஒப்பந்தத்தை ஏற்று நடக்கின்றது. ஈரான் தந்திரோபாயமாக ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவிக்காதபடியால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் சிறிய கொள்கை விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்குமா அல்லது புதிய ஒப்பந்தமொன்று பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட வாய்ப்பு உண்டா என்ற கேள்வியும் எழுகின்றது. அமெரிக்க அதிபர் புதிய ஒப்பந்தம் பற்றியும் பேசியுள்ளார். மறுபக்கமாக ஈரானும் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தல், ஈரான் மீண்டும் அணுஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு மத்திய கிழக்கு சமநிலையில் மாற்றம் ஏற்படலாம். சவூதி அரேபியாவும் செல்வந்த நாடாக இருக்கின்ற படியால் அணுஆயுத உற்பத்தியில் இணங்கக் கூடும். இஸ்ரேல் ஒரு தலைப்பட்சமாக ஈரானின் மேல் விமானத்தாக்குதலை நிகழ்த்தக் கூடும் என ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.
டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான தடைகளை மீண்டும் செயற்படுத்தும் திட்டம், ட்ரம்ப் கூறுவது போல இப் பூகோளத்தை பாதுகாப்பானதொரு இடமாக மாற்றுமா? அல்லது மத்திய கிழக்குப் பிராந்தியத்தை மேலும் ஸ்திரமற்ற குழப்ப நிலைக்கு மாற்றுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. அத்துடன் எதிர்காலத்தில் அணுஆயுத கட்டுப்பாடுகள் விதிக்கும் முயற்சிகளுக்கு ட்ரம்பின் நடவடிக்கையால் குந்தகம் ஏற்படுமா? என்பதும் இன்னொரு கேள்வியாகும். அதே நேரம் ட்ரம்ப் உரத்து தடைகள் பற்றிக் கூச்சலிடும் அளவிற்கு ஐரோப்பிய கம்பனிகள் ட்ரம்பின் தடைகளை அதே வேகத்தில் ஏற்று பின்பற்றுமா? என்பது இன்னொரு கேள்வியாகும். அண்மைக் காலங்களில் ட்ரம்ப் பின்பற்றும் வெளிநாட்டுக் கொள்கை சார்ந்த இராஜதந்திர நகர்வுகள் மெச்சக்கூடியதாக இல்லை. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ட்ரான்ஸ் பசுபிக் வர்த்தக கூட்டுறவு ஒப்பந்தம், இஸ்ரேல் - பலஸ்தீனிய விவகாரம் (கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக்கல்), கியூபாவுடனான இராஜதந்திர உறவுகள், பாரிஸ் காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் மற்றும் கொரிய பிராந்திய அணு ஆயுத விவகாரம், சிரிய உள்நாட்டு நெருக்கடி ஆகிய விடயங்களில் ட்ரம்பின் சத்தம் இடிமுழக்கமாக அமைந்தது. ஆனால் மழை சிறிதளவுதான் பெய்தது என ஒரு மேற்குநாட்டு இராஜதந்திரி கருத்து வெளியிட்டார்.
2003இல் அமெரிக்க ஈராக்கின் இறைமையை புறந்தள்ளி அத்துமீறிப் புகுந்து இன்று 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மத்திய கிழக்கில் போர் மூழுமா? அல்லது சமாதானம் மலருமா? என்பது பற்றி கூறமுடியாதுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையோ, ஊஐஹ அமைப்போ, அல்லது இஸ்ரேலின் மொசாட்டோ, அல்லது சவூதியின் புலனாய்வு அமைப்புக்களோ மத்திய கிழக்கில் என்ன நிகழும் என்பதை எதிர்வுகூறும் நிலையில் இருக்கின்றன எனக் கூறமுடியாது. ஏனெனில் இன்று உலகப் போக்கு மாறிவருகின்றது. பல செயற்பாட்டாளர்களும், உடந்தையாளர்களும் களத்தில் நிற்கின்றனர்.
அடுத்தது பொருளாதாரப் பிரச்சினை சம்பந்தப்பட்டதாகும். அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத்தடை எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது பற்றி தெளிவாகக் கூறமுடியாது. இன்னும் 06 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். இந்த 06 மாதங்கள் ஆறுதல் காலம் என்பது கவனிக்கத்தக்கது. அடுத்த கேள்வி சர்வதேச சந்தையில் எண் ணெய் விலையில் மாற்றம் ஏற்படுமா? என்பதாகும். பொருளாதார தடைகள் செயற்படுத்தப்பட்டால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைய சந்தையில் நிரம் பல் குறைந்து எண்ணெய் விலை அதிகரிக்கும். அத்துடன் மத்திய கிழக்கில் போர் மூளலாம் என்ற ஊகங்களினால் எண்ணெய்க் கொள்வனவு அதிகரிக்க எண் ணெய் விலையும் அதிகரிக்கும் என்ற கருத் தும் முன்வைக்கப்படுகின்றது. சென்ற கோடை காலத்தின் பின் எண்ணெய் விலை முன்னைய விலையிலிருந்து 70ரூ வரை அதிகரித்து ஒரு பரலுக்கு 75 – 78 டொலர் வரை சந்தை நிலவரம் காணப்படுகின்றது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. நாளொன்றுக்கான ஏற்று மதி 2.5 மில்லியன் பரல்கள் எனக் கூறப் படுகின்றது. பொருளாதாரத் தடை அமு லாகும் பட்சத்தில் மேற்கு நாட்டுக் கம்ப னிகள் ஏற்றுமதியை நிறுத்தினால் சிறிய தொகை ஏற்றுமதியை ஈரான் இழக்க வேண்டி ஏற்படும். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கு நாளொன்றுக்கு 70,000 பரல்களே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இச்சிறிய தொகையையும் ஈரான் - சீனா, இந்தியா, துருக்கிக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அடுத்ததாக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம் சம்பந் தப்பட்டதாகும். ஏற்கனவே சில வரிக ளால் அமெரிக்க மக்கள் மீது சுமைகள் ஏற்பட்ட நிலையில் எண்ணெய் விலை அதிகரிப்பினால் சுமைகள் அதிகரிக் கப்பட்டால் மக்கள் குடியரசுக் கட்சி யையும், ட்ரம்பையும் நிராகரிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவார்கள். அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாகிய சவூதி அரேபியா, ஒபெக் அமைப்பில் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்தது. அமெரிக்காவில் எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு சவூதி அரேபியா இடம்கொடுக்கமாட்டாது. அதே நேரம் ரஷ்யாவும் ஏனைய எண்ணெய் உற் பத்தி செய்யும் நாடுகளின் உற்பத்தி, எண்ணெய் விலையில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்த முடியாது. இந்தக் காரணிகளை ஆராயும் பொழுது ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்தடை எண்ணெய் விலையை உயர்த்தும் என்ற வாதத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது. இறுதியாக சவூதி அரேபியாவின் எதிரி நாடாகக் கருதப்படும் ஈரான் அதிகரித்த எண்ணெய் விலையால் நன்மை அடையவோ, சர்வதேச அரங்கில் ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா எண்ணெய் விலையால் நன்மை அடையவோ, அமெரிக்க, சவூதி அரேபியா வழிசமைத்துக் கொடுக்கமாட்டாது.