விண் கல்லில் ஒட்டிக் கொள்ளும் புதுவகையான ராக்கெட்- வேற்று கிரகம் செல்ல புது வழி கண்டுபிடிப்பு
08 May,2018
எமது சூரியமண்டலத்திற்கு பல விண் கற்கள் வந்து செல்கிறது. அவை நீள்வட்டப் பாதையாக பல மில்லியன் கிலோ மீட்டர்கள் பயணிக்கிறது. சில விண் கற்கள் வேறு சூரிய மண்டலத்தில் இருந்து, பூமி வரை வந்து செல்கிறது. எனவே இவற்றை பயன்படுத்தி அதில் பணியக்க ஏதுவான ஒரு விண் கலத்தை(ராக்கெட்டை) நெதர்லாந்து விஞ்ஞானிகள் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த விண் கலம் , பூமிக்கு அருகாமையில் வரும் ஒரு குறித்த விண் கல்லோடு சென்று ஒட்டிக் கொள்ளும். இதனால் அது பயணிக்கும் வேகத்தில் இந்த விண் கலமும் பயணிக்க ஆரம்பிக்கும்.
அத்தோடு விண் கல்லின் பின் புறமாக இந்த விண் கலம் ஒட்டிக் கொள்வதால், அது பாதுகாப்பாக இருக்கும். அங்கே மனிதர்கள் உறங்கு நிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதனால் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜன் தேவையான அளவு இருக்கும். பல மாதங்களாக உறங்கிக் கொண்டு இருக்கும் மனிதர்கள், புது வகையான கிரகங்களை, அல்லது குறித்த ஒரு பகுதியை அடைந்த உடனே கண் விழித்துக் கொள்வார்கள். அவர்கள் குறித்த கிரகங்களை ஆராட்சி செய்த பின்னர் மீண்டும் உறங்கு நிலைக்கு சென்றுவிடுவார்கள்.
அந்த விண் கல்லானது மீண்டும் பூமிக்கு அண்மையில் வரும்போது, குறித்த விண் கலம் தன்னை அந்தக் கல்லில் இருந்து விடுவித்து, பூமியை நோக்கி வந்துவிடும். இதனூடாக விண் கலத்தில் பயணித்தவர்கள் மீண்டும் பூமிக்கு வந்துவிடுவார்கள். சில விண் கற்கள் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியைக் கடப்பது உண்டு. சில விண் கற்கள் 10 மற்றும் 15 ஆண்டுக்கு ஒருமுறை பூமியைக் கடக்கிறது. இது போன்ற ஒரு விண் கல்லிலேயே மனிதன் பயணத்தை மேற்கொள்ள முடியும். இதற்கு ஏதுவான ஒரு விண் கல்லை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டார்கள். அந்த விண் கல் பூமிக்கு அருகாமையில் அடுத்த முறை வரும்வேளை, அந்த விண் கலத்தை ஏவ அவர்கள் தம்மை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்தப் பயணம் தற்கொலைக்கு சமமானது என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்