டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கத்தின் நட்சத்திரவிழா
15 Apr,2018
டென்மார்க்கின் பல்வேறு நகரங்களிலும் வாழும் கலைஞர்களையும், கலை ஆர்வலர்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் கலைஞர் சங்கம் தனது முதலாவது வருடாந்த விழாவை கொல்ஸ்ரபோ நகரில் எதிர்வரும் 28.04.2018 அன்று வெகு விமரிசையாக கொண்டாட இருக்கிறது.
டென்மார்க்கின் பல பாகங்களிலும் இருந்தும் கலைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள்.
இசை, நடனம், நாடகம் என்று பல்சுவை கதம்ப விழாவாக ஒளிகாட்ட இருக்கிறது..
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கலைக்காக நடைபெறும் ஒரு விழா என்று கூறக்கூடியளவு இதன் ஆரம்ப ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
ஒரு வருட காலத்திற்கும் மேலாக டென்மார்க்கின் பல பகுதிகளிலும் எண்ணற்ற கூட்டங்களை நடத்தி கலைஞர்களை ஒன்றுபடுத்தி, அதற்கான முறைப்படியான யாப்பு எழுதி, நகரசபையில் பதிவு செய்து, ஆயுட்கால தலைவர்களை அதிகாரம் செய்யவிடாது, ஜனநாயக முறைப்படி பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
ஓர் இனிய மாலைப் பொழுதாக இந்த நாள் அமையும் என்பதை சொல்லவும் வேண்டுமோ..
வெறும் 50 குறோணர் நுழைவுக்கட்டணம்..
அன்றையதினம் அமைக்க இருக்கும் மின்னலங்கார ஜோடனைகளுக்கே மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் அதன் ஏற்பாட்டாளர்.
தரத்தை கூட்டி கட்டணத்தை குறைத்துள்ளதால் இது உண்மைக் கலைஞர்களின் நிகழ்வு என்று கூறலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இருக்கைகள் மிகவும் குறைவு.. முன்னரே நுழைவுச் சீட்டுக்களை எடுத்துவிடுங்கள்.. பின்னர் வருந்த நேரிடும்.
இதோ அவர்களுடைய விளம்பரம்.