பிரிட்டனில் இந்திய-வம்சாவளி நகைக்கடை உரிமையாளர் கொலை - 6 பேர் கைது
01 Feb,2018
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்நிக்லால் ஜோகியா என்பவர் பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பெல்கிரேவ் சாலையில் நகைக்கடை நடத்தி வந்தார். ஜோகியோ கடந்த வாரம் தனது கடையிலிருந்து வீடு திரும்பும் போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் மீட்டு, கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 28-ம் தேதி வரை 6 பேரையும் போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.
நகைக்கடையின் வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் ஜோகியா கடையை பூட்டுவது மட்டுமே உள்ளது. அதன் பின் என்ன நடந்தது என்பது குறித்து பதிவாக வில்லை. இதனால் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோகியா மரணம் அவரது குடும்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோகியா மரணத்திற்கு நீதி வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.