பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வேலைக்காரன்.! கையும் களவுமாக பிடித்த பெண்.!!
23 Jan,2018
பெங்களூர் இந்திரா நகரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தர்மேந்திரா குமார் என்பவர் துப்புரவு வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை பல்வேறு கோணங்களில் ரகசியமாக படம் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
வீட்டுக்கு சென்ற பிறகு அதை பார்த்து ரசிப்பதும், நண்பர்களுக்கும் அவற்றை ஷேர் செய்து அந்த பெண்களை பற்றி ஆபாசமாக கமெண்ட் அடித்து இன்பம் காணுபவருமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் ரகசியமாக பெண்களை போட்டோ எடுத்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் ஊழியர் அதை கவனித்துள்ளார்.
பிறகு இதை பற்றி அந்த பெண் அனைவரிடமும் கூறினார். பிறகு தர்மேந்திரா பிடித்து அவரது போனை ஆய்வு செய்ததில் பல ஆபாச கோணங்களில் பெண் ஊழியர்கள் போட்டோக்கள் மற்றும் பெண்கள் கழிவறையில் பெண்கள் இருக்கும் வீடியோக்களும் போனில் இருந்தன.
பின்னர் இது குறித்து பெண் ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் தர்மேந்திரா மீது காவல் நுலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கழிவறையை சுத்தம் செய்ய செல்லும் போது ரகசியமாக செல்போனை வைத்து பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தது அம்பலமானது.