மைத்துனரை பார்க்க சிறைக்கு சென்ற பெண்.! பலவந்தமாக இளபெண்ணை கற்பழித்த போலீஸ்காரர்.!
29 Dec,2017
குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது தான் காவலர்களின் வேலை .
ஆனால் அந்த காவலர்களே குற்ற செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகமாகி வருகிறது.
காவலர்களே மோசடி செய்வது , கற்பழிப்பு போனற சம்பவங்களில் ஈடுபடுவது தற்போது அதிகமாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சிறையில் இருக்கும் தனது மைத்துனரை பார்க்க சென்றுள்ளர்.
அப்போது அங்கிருந்த காவலாளி கைதியை சந்திக்க அழைத்து செல்வதாக கூறி அவரை ஏமாற்றி தனியாக அழைத்து சென்றுள்ளார்.
பிறகு அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்துள்ளார். மேலும் இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியுள்ளார்.
ஆனால் அந்த பெண் தனக்கு நடந்ததை வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் அந்த காவலாளி மீது புகார் அளித்தனர். அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.