றணார்ஸ் நகரில் உள்ள றயன்ஸ்கோவ் என்ற இடத்தில் 26 வயதுடைய தமிழ் இளைஞர் Mr.Suganth Antony Raj சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வெள்வி இறந்த நிலையில் வீதியில் இளைஞரின் உடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேகத்தின் பெயரில் இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் தேடி போலீசார் வலை விரித்திருந்தனர்.
சர்வதேச போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில் கொலை செய்து தப்பி ஓடியாதாகக் கருதப்படும் மூன்று நபர்களும் ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒல்போ நகரைச் சேர்ந்தவர்களாகும், ஜேர்மனிய, கொலன்ட் நாட்டு போலீசாருடன் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை ஏற்கெனவே போலீசார் அறிந்துள்ளனர், கொலைக்கான காரணம் சரியாக தெரியவில்லை என்று முதற்கட்ட செய்திகள் கூறுகின்றன.
மேலும் தற்போது நடைபெறும் வன்முறை குழுக்களுடன் தொடர்புபட்டதாக இது காணப்படவில்லை என்கிறது போலீஸ்.
சந்தேக நபர்கள் மீது நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் சரியான உண்மைக்காரணங்கள் வெளிவர வாய்ப்புண்டு.
துயர் பகிர்வோம்
பெயர் : Mr.Suganth Antony Raj டென்மார்க்
பிறந்த நாள் : 19/10/1991
இறந்த நாள் : 22/12/2017 ( வெள்வி இரவு 23:29)
பிறந்த இடம் : ஸ்வன்பேர்க் - டென்மார்க்
இறந்த இடம் : றணாஸ் - டென்மார்க்
தொடர்புக்கு : 24220223 ANTONRAJ/ MATHI 75915804
அன்னாரின் நல்லடக்கம் 5 .01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Sankt Mortens kirke RANDERS centrum சேமக்காலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தந்தை
ANTON