ஒருவர் விடுமுறை செல்லும் போது வீடு ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது, இத்தகைய வீடுகளை வாடகைக்கு விட்டு சென்றால் ஆளில்லாமல் போகும் நாட்களுக்கு வருமானம் கிடைக்கும்.
அதேவேளை விடுமுறையில் செல்வோர் வேறொரு நாட்டில் தங்கியிருக்கும்போது உண்டாகும் செலவையும் ஈடுகட்டிவிடலாம்.
மேலும் கோட்டல்களுக்கு பெரிய கட்டணம் கட்டுவதைவிட ஒரு வீட்டில் மலிவாக இருப்பது இலாபகரமாக அமையும் என்பதால் இத்தகைய முறைக்கு பெரிய வரவேற்பு உருவாகி வருகிறது.
இன்றைய உலக மயமாக்கலில் உலகமே நாடாக மாறி வரும் சூழலில் இணையத்தின் வளர்ச்சி காரணமாக மக்களின் வாழ்க்கை முற்றாகவே புதிய கோலம் பெற்றுவிட்டது.
எனவே இந்த புதிய வாழ்வும் மலர்ந்துள்ளது..
சென்ற ஆண்டு இத்தகைய முறையில் டென்மார்க்கில் உள்ள வீடுகளை வாடகைக்கு பெற்றவர்கள் தொகை 732.000 இந்த ஆண்டோ 842.000 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல டேனிஸ் மக்களை பொறுத்தமட்டில் 685.000 பேர் வெளிநாடுகள் சென்று இவ்வாறு வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.
இதை என்று அழைக்கிறார்கள்ஸ
எதிர்கால உலகத்தில் வாடகைக்கு கொடுக்கக்கூடியவாறு வீடுகளை கட்டுவது புத்திசாலித்தனமானது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.
இவ்வாறு குடியேறுவோர் வீடுகளை உடைத்துவிடாதிருக்க ஏதாவது சட்ட ஏற்பாடுகள் அவசியம் என்பதும், வீட்டைத் துடைத்து வழித்துக் கொண்டு போகாமலிருக்கவும் அது தேவை என்பதும் கவனிக்கத்தக்கது.
இதனால் ஓட்டல் தொழிலில் வீழ்ச்சி ஏற்படுமென்று கூறமுடியாது காரணம் உலகம் முழுவதும் உல்லாசப் பயணம் இன்று பெரும் தொழிலாகிவிட்டது.
விரைவுச்சாலையில் மீண்டும் கல் வீச்சு..
டென்மார்க்கின் விரைவு சாலைகளின் மேலால் குறுக்காக செல்லும் பாலங்களில் நின்று பாரமான கல்லை வாகனங்களில் போடுவது ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது.
பாரமுள்ள கல்லை பாலத்தில் இருந்து வாகனத்தின் மீது போட்டுள்ளனர், இதனால் இரண்டு கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் ஊதின்ச பகுதியில் இடம் பெற்றுள்ளது, கடந்த செப் 9ம் திகதி 40 கிலோ எடையுள்ள கல்லை வீசிய அதே சந்தேக நபரே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது.
இவ்வாறான கல் வீச்சுக்கள் சிறிதும் பெரிதுமாக பல தடவைகள் நடைபெற்றமை தெரிந்ததே சென்ற ஆண்டு இதுபோன்ற கல் வீச்சு காரணமாக 33 வயது பெண்மணி ஒருவர் மரணமடைந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
பொதுவாக இவ்வளவு பாரமான கல்லை ஒருவர் தூக்கி வீச முடியாது இரண்டு பேரால்தான் முடியும் என்று கருதுகிறார்கள் போலீசார்.
பாலங்களின் மீது கண்காணிப்பு கமேராக்களை போட வேண்டுமென யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது, இதற்கான திட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை.
ஆகவே பொது மக்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது, நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலில் உயிரழப்பு ஏற்படவில்லை.
இவ்விதம் கல்லை வீசும் ஒருவரை கண்டறிய முடியாதிருப்பது போலீசாருக்கு பலத்த சவாலாகவே இருக்கிறது.
சுமார் 40 கிலோ எடையுள்ள கல்லு பாலத்தில் இருந்து விழும்போது அதன் மீது காரின் கண்ணாடி 110 கி.மீ வேகத்தில் மோதும்போது மரணப் பேராபத்தே ஏற்படும் என்பது தெரிந்ததே
ஓகூஸ் நகர சிறிய இரக ரயில் வண்டி திறப்பு
டென்மார்க்கின் கலாச்சார நகரான ஓகூசில் லெற்பான என்று டேனிஸ் மொழியில் அழைக்கப்படும் தண்டவாளத்தில் ஓடும் சிறிய இரக ரயில் வண்டி போக்குவரத்து இன்று திறப்புவிழா செய்யப்பட்டது.
நகரை ஊடறுத்து ஓடும் பேருந்து வண்டி போல இது ஓட இருக்கிறது..
இன்று வியாழன் பகல் 10.15 மணியளவில் ரிப்பன் வெட்டி முதலாவது வி.ஐ.பி பயணம் நடைபெற்றது, ஓகூஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஸ்கைபுய் வைத்தியசாலை வரை இந்தப் பயணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து பொது மக்கள் போக்குவரத்துக்கு இன்று முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது, நாளை முதல் கட்டண சேவையாக பயணத்தை ஆரம்பிக்கிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோது இதற்கு எதிர்ப்பு கிளம்பியது இதனால் சேவை நிறுத்தப்பட்டு ஆட்கள் இல்லாமலே சுமார் ஓர் இலட்சம் கி.மீ தூரம் ஓடியும் பரிசீலிக்கப்பட்டது.
வீதி வழியாக இது போன்ற சிறிய இரக ரயில் வண்டிகள் ஓடுவது உலகில் பல நாடுகளில் பாவனையில் இருக்கிறது, ஆனால் டென்மார்க்கில் இது புதிது.
வீதியால் போகும் மக்களின் நடமாட்டத்துடன் தொடர்புபட்டதால் அனுமதி மறுக்கிறார்களா.. என்பது ஒரு கேள்வி, மேலும் இன்றுகூட அது பரிசோதிக்கப்பட்டே அனுமதி வழங்கப்படும்.
பாவனை அனுமதிக்கப்படாவிட்டால் பலத்த நஷ்டம் ஏற்படும்.
TKS.S.K.DURAI