பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை?
02 Dec,2017
பிரித்தானிய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு இலங்கை அகதிகளின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 535 அகதிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இருந்தபோதும், அவர்களுள் ஒருவரது விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.