சுய இன்பம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று தான். பொதுவாக ஆண்கள் மட்டுமே சுய இன்பத்தில் ஈடுபடுவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று.
கல்லூரிப் பெண்கள் முதல் குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்கள் வரை பெரும்பாலானோர் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அப்படி சுய இன்பம் செய்யும் பெண்கள் பொதுவாக சில தவறுகளைச் செய்கின்றனர். பொதுவாகவே சுய இன்பம் மேற்கொள்ளும் பெண்கள் ஆரோக்கியம் பற்றி யோசிக்காமல் தங்களுக்கு தோன்றும் வகையில் எதையாவது செய்துவிடுவது உண்டு. அது அந்தரங்கப் பகுதியில் அலர்ஜி, அரிப்பு போன்றவற்ரைற ஏற்படுத்திவிடும்.
சுய இன்பம் என்பது சாதாரணமான ஒன்று தான். பெண்கள் சுய இன்பம் காணும் போது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
பெண்ணுறுப்பு மிகவும் மென்மையான பகுதி. அதில் தேவையில்லாமல் சில பொருட்களைப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகள் உண்டாகும்.
பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சுய இன்பம் மேற்கொள்ளும் முன்பாக, அந்தரங்க உறுப்பபையும் கைகளையும் நன்கு சுத்தம் செய்துவிட வேண்டியது அவசியம்.
இதுபோன்ற சிறுசிறு ஆரோக்கிய விஷயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, நோய்த்தொற்றுகள் உண்டான பின், சிரமப்படுதல் கூடாது.
முதலிரவு பற்றியசில குறிப்புகள்
நம் வாழ்க்கையில் நமக்கு மறக்க முடியாத அனுபவம் என்றால் அது முதலிரவு அனுபவமாகும். ஒவ்வொருவருக்கும் தங்களது முதலிரவு பற்றி பலப்பல கனவுகள் இருக்கத்தானே செய்யும்ஸ! ஆனால் அது உண்மையில் எப்படி இருந்தது என்பதை பெரும்பாலும் யாரும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இந்த பகுதியில் பெயர் வெளியிட விரும்பாத இந்திய பெண்கள் தங்களது முதலிரவு அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்களை காணலாம்.
1. ஒருவித வித்தியாசமான பயம் :-
முதலிரவுஎங்களது முதலிரவு எனது கணவரது வீட்டில் தான் நடந்தது. எங்களது அறைக்கு அடுத்து இருப்பது என் கணவரது பெற்றோர்களது அறை தான். ஒரு சிறிய சத்தம் என்றால் கூட அவர்களுக்கு நன்றாக கேட்கும். நாங்கள் அன்று மிகவும் மூட் அவுட் ஆகிவிட்டோம்.
2. அன்றைய தினம் களைப்பாக இருந்தது :-
முதலிரவுஎங்களது திருமணத்திற்கு வெகு நேரமாகியும் உறவினர்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர்களை உபசரித்து, உபசரித்து நாங்கள் களைத்துவிட்டோம். முதலிரவு அறைக்குள் சென்றவுடன் குட் நைட் சொல்வதை தவிர வேறு வார்த்தை எதுவும் பேசமுடியவில்லை.
3.ஆசையாக முத்தமிட கூட முடியவில்லை :-
நீங்கள் முதலிரவு என்பது உடலுறவுக்கானது என்று தானே நினைத்துக்கொண்டிருப்பீர்கள்? ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால், திருமணத்தன்று உறவினர்கள், கேமிரா மேன், விடியோ கிராப்பர் என அனைவரையும் பார்த்து முழு நாள் சிரித்து கொண்டே இருந்ததில், எனது முகத்தில் உள்ள சதைப்பகுதி அசைவுகளுக்கு துணை புரியாமல் போனது. என் ஆசை கணவருக்கு என்னால் ஒரு முத்தம் கூட தரமுடியாமல் போனது.
4. வாழ்க்கையில் மறக்க முடியாததும், பிடித்தமானதும் எங்களுடைய இரண்டாவது திருமணம் :-
நான் ஒரு விதவை, எனது கணவர் ஒரு விவாகரத்தானவர். எங்களது குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் தான் எங்களுக்கு திருமணமானது. திருமணம் முடிந்த உடன் எங்களுக்கு ஹோட்டலில் ஒரு ரூம் புக் செய்து கொடுத்தனர். எனக்கு மிகவும் பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவரை எப்படி அணுக போகிறோம் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவர் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது எனக்கு பிடித்த ஒரு படத்தின் சிடி. நாங்கள் இருவரும் இரவு முழுவதும் சிரித்து, சிரித்து அந்த படத்தை பார்த்து மகிழ்ந்தோம்.
5. நான் அப்படியே அதிர்ந்து விட்டேன் :-
நாங்கள் இருவரும் வேறு வேறு கலாச்சாரத்தை சார்ந்தவர்கள். திருமணம் முடித்து முதலில் எனது கணவர் வீட்டிற்கு சென்றோம். அப்போது அங்கே நான் கண்ட காட்சி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. எங்கள் இருவருக்கும் இடையே பெரிய திரை போடப்பட்டிருந்தது. அவர்களது கலாச்சாரப்படி இருவரும் பார்த்துக்கொள்ள கூடாதாம். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தான், எனது பெற்றோர்களது வீட்டில் எங்களுக்கு முதலிரவு நடந்தது.
6. என்ன நடக்கும் என தெரியாது :-
நீங்கள் முதலிரவுக்கு எவ்வளவு தான் தயாராகி சென்றாலும், அங்கே நடப்பது என்னவோ, வேறு ஒரு புது அனுபவமாக தான் இருக்கும். எனக்கு நடந்ததும் அதே தான்.
7. ரொம்ப சீக்கிரமே முடிந்தது :-
எங்கள் இருவருக்கும் முதலிரவு குறித்து பலப்பல கனவுகள் இருந்தது. எங்களுடையது தூரத்து உறவு, அவர் வெளிநாட்டில் இருந்தார். ஆறு மாத காலம் நாங்கள் எங்களது முதலிரவு குறித்து பலப்பல கனவு கோட்டைகளை கட்டி வைத்திருந்தோம். அந்த நாள் வந்த போது, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டத்தில், முதலிரவு சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிட்டது.
பிறப்புறுப்பு மற்றும் அக்குளில் வளரும் முடிகளை ஏன் அகற்ற கூடாது தெரியுமா?
மனிதர்கள் தோன்றிய காலத்தில், மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கும் உடல் முழுக்க முடிகள் இருந்தன. காலப்போக்கில் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்தால் முடி வளர்ச்சி குறைந்து. உடலின் சில பாகங்களில் மட்டுமே மனிதர்களுக்கு முடி வளர்கிறது.
கண் இமைகள், புருவம், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகள் என மனிதர்களுக்கு சில இடங்களில் வளரும் முடிகள் மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், சமீப காலமாக ஃபேஷன், அழகு என்ற பெயரில் நாம் மொத்தமாக முடிகளை அகற்றி விடுகிறோம்.
இனி, ஏன் மனிதர்கள் அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகள் அகற்ற கூடாது என்பது குறித்து பார்க்கலாம்ஸ
என்ன காரணம்?
நமது உடலில் ஆங்காங்கே முடி வளர்வது சில காரனங்களுக்காக தான். உதாரணமாக, இமைகள் கண்களை தூசு படாமல் பாதுகாக்கிறது, புருவம், வியர்வை கண்களை பாதிக்காமல் இருக்க உதவுகிறது, மூக்கு மற்றும் காதுகளில் வளரும் முடி நுண்ணிய பொருட்கள் உடலுக்குள் புகாமல் இருக்க உதவுகிறது.
தலைமுடி!
தலைமுடி அதிக வெப்பம் மற்றும் குளிர் தலை மற்றும் மூளையை பாதிக்கலாம் இருக்க உதவுகிறது. ஒருவேளை வெப்பம், மற்றும் குளிர் நேரடியாக தலையில் தாக்கத்தை உண்டாக்கினால், மூளையிலும் தாக்கம் உண்டாகும். உடலில் வளரும் முடிகளும் இதே காரணத்திற்காக தான் வளர்கின்றன. பாதுகாப்பை அளிக்கின்றன.
பூரித்து போகும் போது முடி எழுதல்!
சில சமயம் நீங்கள் பூரிப்படையும் போது முடிகள், எழும்பி நிற்கும். இதற்கு காரணம். ஒவ்வொரு தனி முடியும், தசையுடன் சேர்ந்து, தொடர்புக் கொண்டு இருக்கிறது.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #1
முதல் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அதிக வெப்பம் ஆதல் சரியானதல்ல. இப்பகுதிகளில் வளரும் முடி, அதிக வெப்பம் ஆகாமல் பாதுகாக்கின்றன.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #2
இரண்டாம் காரணம், நடக்கும் போது, ஓடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் உராய்வை இப்பகுதிகளில் வளரும் முடிகள் குறைக்க உதவுகின்றன.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #3
மூன்றாம் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடிகள், உடலுறவு உணர்சிகளை தூண்ட உதவுகின்றன.
மேலும், தாடி, அக்குள், பிறப்புறுப்பு பகுதில் வளரும் முடிகளில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நீங்கள் குளித்து சுத்தமாக இருந்தால் போதுமானது. இவ்விடங்களில் முடிகளை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
உண்மைகள்!
* சராசரியாக ஒரு மனிதரின் தலையில் மட்டும் 1,30,000 முடிகள் இருக்கின்றன.
* இதில் 93% தற்போது வளர்ந்து கொண்டிருக்கும்.
* மாதத்திற்கு 1 சென்டிமீட்டர் அளவு முடி சராசரியாக வளர்கிறது.
* ஒருநாளுக்கு சராசரியாக உங்களுக்கு நூறு முடிகள் வரை உதிரும்.
* ஆராய்ச்சியாளர்களுக்கு உங்களை பற்றி அறிய வெறும் மூன்று சென்டிமீட்டர் முடி போதுமானது.