டூத் பிரஷ்க்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்!!
03 Nov,2017
முப்பது வருட காலத்திற்கு முன்னால் வேப்பங்குச்சி அல்லது சாம்பல் பொடியை பயன்படுத்தி பல் தேய்த்து வந்தார்கள். ஆனால் நவீன கலாச்சாரம் காரணமாக பற்பசை மற்றும் பல் தேய்க்க டூத் பிரஷ் ஆகியவை கொண்டு வரப்பட்டது. நாள் போக்கில் இதை பயன்படுத்தி வர பல் மற்றும் ஈறுகளில் வலி மட்டுமே நமக்கு மிச்சமாக கிடைத்தது. இயற்கையாக சில மாற்று பொருள்களை பயன்படுத்தி பல் தேய்க்கும் வழிகளை இப்போது பார்க்கலாம்.
டூத் பிரஷ்க்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்:-
“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்பது போல ஆலமர குச்சி, வேப்பமர குச்சி, கருவேல மர குச்சியை பயன்படுத்தி பல் தேய்த்தால் எந்த தீங்கும் ஏற்படாது. கருவேல குச்சிகள் பயன்படுத்தி பல் தேய்த்தால் பல்லுக்கு ஆரோக்கியமும் உறுதியும் ஏற்படுத்தலாம் என சிந்தாமணி பாடலில் கூறப்பட்டு உள்ளது.
வேப்பங்குச்சி பல்லை சுத்தமாகவும் வெள்ளையாகவும் வைத்து இருக்க உதவுகிறது. இதைத்தவிர மா, தேக்கு, புங்கை, நாவல் மரத்தின் குச்சிகளும் பற்களுக்கு ஆரோக்கியம் அழிக்க உதவுகிறது.
துவர்ப்பு சுவை உடைய குச்சிகள் ஈறுகள் மற்றும் இரத்தம் வருதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.கசப்பு சுவை உடைய குச்சிகள் பாக்டீரியா நம்மை அண்டாமல் பாதுகாக்க உதவுகிறது.
மேற்கண்ட குச்சிகள் பற்களுக்கு வலிமை அளித்தாலும் அதை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். பசுமையான குச்சிகளை எடுத்து நுனி பகுதியை கடித்து பிரஷ் மாதி செய்து கொண்டு பற்கள், ஈறுகள், போன்றவற்றில் மென்மையாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.