ஜேர்மனியில் வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்ள திட்;டமிட்ட சிரியா இளைஞன் கைது
31 Oct,2017
ஜேர்மனியில் குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட 19 வயது சிரிய இனைஞனை கைது செய்துள்ளதாக ஜேர்மனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இளைஞன் இன்று அதிகாலை ஜேர்மனியின் வடகிழக்கு நகரமொன்றில் கைது செய்யப்பட்டுள்ளான்.
காவல்துறையினர் இளைஞனின் வீட்டையும் இந்த சதி முயற்சியுடன் நேரடியாக தொடர்புபடாத சந்தேகநபர்கள் சிலரின் வீட்டையும் சோதனையிட்டுள்ளனர்.
இதுவரை கிடைத்த தகவலின் படி குறிப்பிட்ட இளைஞன் கடந்த யூலை மாதம் ஜேர்மனியில் குண்டு தாக்குதலை மேற்கொண்டு பலரை கொல்ல திட்டமிட்டமை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலிற்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட இளைஞன் கொள்வனவு செய்ய தொடங்கினான் கைப்பிட்ட இளைஞனிடம் தெளிவான இலக்கொன்று இருந்ததா என்பது தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இளைஞன் பயங்கரவாத அமைப்பொன்றை சேர்ந்தவன் என்பதற்கானஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.