ஐந்து மாதமாக நாயுடன் நடுக்கடலில் தத்தளித்த பெண்கள்
28 Oct,2017
திசை தெரியாமல் வழி மாறி சென்ற இரு பெண்கள் நாயுடன் ஐந்து மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் மற்றும் டாஷா என்ற இரு பெண்கள் தன்னுடைய வளர்ப்பு நாயுடன், விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளனர். வித்தியாசமாக கழிக்க முயற்சி செய்து தனியாக ஒரு சிறிய ரக படகு வாங்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். மே மாத தொடக்கத்தில் பசுபிக் கடலில் இருக்கும் ‘தஹிதி’ தீவிற்கு செல்ல முற்பட்டனர்.
அப்போழுது பாதி வழியிலேயே படகு நின்றதால், எப்படி திரும்பி செல்வது என தெரியாமல் கைகளாலேயே துடுப்பு போடா ஆரம்பித்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக கப்பலின் திசை மாறி அதற்கு எதிர் திசையில் இருக்கும் தைவான் கடல் பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு ஐந்து மாதங்களாக உணவு, குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தைவான் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் பொது இவர்களை கண்டறிந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்கள் இருவரும் தைவான் கடற்படைக்கும், மீனவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.