குழந்தையை ஓவனில் வைத்து சமைத்த தாய்!
19 Oct,2017
அமெரிக்காவில் தன்னுடைய இரு குழந்தைகளையும் ஓவனில் உயிருடன் வைத்து சமைத்துக் கொன்ற தாயின் செயல் பதற வைத்துள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் லமோரா வில்லியம்ஸ்(வயது 24) என்ற பெண் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வந்த நிலையில், 2 மற்றும 1 வயது மதிக்கத்தக்க கடைசி இரு குழந்தைகளையும் ஓவனில் வைத்து சுவிட்சை ஓன் செய்துள்ளார்.
இரு குழந்தைகளும் துடிதுடித்து இறந்த நிலையில், கணவரான ஜமீல் பென்னுடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.
வீடியோவில் குழந்தைகளின் நிலையை பார்த்து கதறிய ஜமீல் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து சென்ற அதிகாரிகள் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் லமோராவின் தந்தை இறந்ததில் இருந்தே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக வேலைவிட்டு நின்ற நிலையில், போதுமான துன்பத்தை அனுபவித்து விட்டேன் என நண்பர்களிடம் கூறியுள்ளார்.
அதிகளவான மன அழுத்தமே லமோராவின் இச்செயலுக்கு காரணம் என கருதப்படுகிறது.
மற்ற இரு குழந்தைகளில் நான்கு வயதான சிறுவன் உயிர்தப்பியுள்ளான், மூத்த பெண் சம்பவம் நடந்த போது வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.