கழிவறையில் கற்பழிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி
07 Oct,2017
டெல்லியில் ஆறு வயது சிறுமி பள்ளிக் கழிவறையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் ஆறு வயது சிறுமியே இவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர், மருத்துவர்களும், சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.
உடனடியாக குற்றவாளியை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், பள்ளியில் 15 நாட்களுக்கு முன்னர்தான் பணியில் சேர்ந்ததும் தெரியவந்துள்ளது.
பள்ளியில் இருந்து கிளம்புவதற்கு முன் சிறுமி கழிவறைக்கு சென்றபோதே, குற்றவாளி இவ்வாறான செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது