கருவாட்டுக் குழம்பு.
23 Sep,2017
தேவையான பொருட்கள்:
சதையுள்ள கருவாடு 700 கிராம்,
கத்தரிக்காய் 300 கிராம்,
பச்சை மிளகாய் 6,
வெங்காயம் 2,
கடுகு 1 தேக்கரண்டி,
பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி,
வெந்தயம் 1 தேக்கரண்டி,
மிளகாய்த் தூள் 2 - 3 மேசைக்கரண்டி,
தாழிக்க எண்ணை,
பழப்புளி கொஞ்சம்,
விரும்பினால் தக்காளிப் பழம் போடலாம்.
செய்முறை:
கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி, ஒரு மணித்தியாலம் ஊற விடவும். பின் அதன் தோலை நீக்கி வடிவாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவினால் அதில் உள்ள உப்பு போய் விடும்.
கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும்.
இனி.... நீளமாக அரிந்த வெங்காயத்தை பாத்திரத்தில் இட்டு சிறிது வதக்கவும்.
வதக்கும் போது... கடுகு, பெருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றையும் போட்டு தாழிக்கவும்.
இப்போ இரண்டரை கப் தண்ணீர் விட்டு...... கருவாடு, கத்தரிக்காய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த கருவாட்டுக் குழம்பில் உப்பின் ருசி பார்க்கவும். உப்பு காணாமல் இருந்தால் போடவும்.
உப்பு கூடியிருந்தால் இரண்டு உருளைக்கிழங்கை போடவும்.
இப்போ.... சுவையான கருவாட்டுக் குழம்பு தயார்.
இந்தக்குழம்பு சோறு, புட்டு, இடியப்பம் எல்லாவற்றுடனும் கலந்து சாப்பிட தோதாக இருக்கும்.
கருவாடு சமைத்த பின் வீட்டின் ஜன்னல்களை அகலாமாக திறந்து விடவும்.