77 வருடமாக உணவு,நீர் இல்லாமல் வாழும் அதிசிய மனிதர்.!
22 Sep,2017
உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் ஒரு முதியவர் 77 வருடங்களாக வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு வேளை சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் இந்தியாவில் வசிக்கும் ப்ரஹ்லாத் ஜானி என்ற சாமியார் உணவு இல்லாமல் 77 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.
இவரை அனைவரும் மாதாஜி என அழைக்கின்றனர். இந்த்தியாவின் பல இடங்களுக்கு நடந்தே செல்கிறார்.
பல நேரம் தியானம் செய்வது தன்னை தேடி வரும் மனிதர்களுக்கு ஆசி வழங்குவது என இவர் பிசியாக இருக்கிறார்.
உணவு மற்றும் நீர் எடுத்துகொள்ளாததால் இவர் இயற்கை உபாதைகளை கழிக்க கூட செல்வதில்லை..
உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 77 வருடங்களாக இவர் வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரை டெல்லிக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தினர்.
மேலும் அவர் தங்கிய அறையில் பல கேமராக்களை வைத்து அவரை கண்கானித்தனர்.
15 நாட்களாக அறையில் இருந்த அவர் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் இயலபாக இருந்தார்.
பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்த பட்டபோது அவர் ஆரோக்கியமாக இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.
தற்போது 82 வயதாகியுள்ள அவர், சுறுசுறுப்பாகவே இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.