புலியின் உறுமலினால் 12 குரங்குகள் ஒரே நேரத்தில் மாரடைப்பால் உயிரிழப்பு
13 Sep,2017
காட்டுப் புலியொன்றினால் பயந்த 12 குரங்குகள் ஏக காலத்தில் மாரப்படைப்பினால் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இக்குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை கிராமவாசிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வபைநச-1 காட்டுப் புலியின் உறுமலினால் அச்சமடைந்த 12 குரங்குகள் ஒரே நேரத்தில் மாரடைப்பால் உயிரிழப்பு வபைநச 1இது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குரங்குகளின் இறந்த உடல்களை பரிசோதித்தபோது, அவை ஒரே நேரத்தில் மாரடைப்பினால் உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.
காட்டுப் புலியொன்றின் உறுமலைக் கேட்டு அச்சமடைந்ததால் இக்குரங்குகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 12 குரங்குகள் மாரடைப்பினால் உயிரிழந்தமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.