புதினா மல்லி இறால் குழம்பு
05 Sep,2017
இறால் – 1/4 கிலோ (மீடியம் சைஸ்)
பல்லாரி – 2
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
புதினா – 1 சிறிய கட்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
இஞ்சி – சிறிதளவு
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
மல்லித்தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் பால் – 100 மி.லி.
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் இறாலை நன்கு கழுவ வேண்டும். இத்துடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தனியாக வைக்கவும். அப்புறம் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பல்லாரி வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மற்றொரு பொடியாக நறுக்கிய பல்லாரியை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அரைத்த புதினா, மல்லி கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். இக்கலவையுடன் தேங்காய் பாலை சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் இத்துடன் இறாலை சேர்த்து, 5 நிமிடம் வெந்ததும், உப்பு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விடவும். இறால் வெந்ததும் குழம்பை இறக்கவும். புதினா மல்லி இறால் குழம்பு தயார்ஸ சாதம், இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.