................................
பெண்களுக்கு உலகம் முழுவதும் வெவ்வேறு முறையிலான கொடுமைகளும் அநீதிகளும் நடப்பதை நாம் செய்தித்தாள்களிலும் டீவியிலும் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் பெரும்பாலானவை மதங்களின் பேரால் நிகழ்த்தப்படுவதாக உள்ளன. சடங்குகள் என்ற பெயரில் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
சில குறிப்பிட்ட நாடுகளில் பெண்களுக்கு மிக மோசமான கொடுமைகள் நிகழ்கின்றன.
female genital mutilation என்னும் செயல் புனிதச் சடங்காக சில நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. இதற்குப் அர்த்தம் என்ன தெரியுமா? female genital mutilation என்றால் பெண்ணுறுப்பு சிதைத்தல் என்று பொருள். கேட்கவே கொஞ்சம் பதறுகிறதா?
ஆனால் காலங்காலமாக சில நாடுகளில் இந்த கொடூரம் நடந்து வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த சடங்கானது வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படுகிறது. இதை புனிதச் சடங்கு என்னும் பெயரில் அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.
3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகிறது.
சோமாலியா, உகாண்டா, எகிப்து, சூடான், கானா உள்ளிட்ட நாடுகளில் உள்ள 70 சதவீதத்துக்கும் மேல் பெண்களுக்கு இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது தான் கொடுமை.
பெண்களுக்குப் பாலுணர்வு இயற்கையாகவே இருக்கும். அதைக் கட்டுப்படுத்தி அடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறது என்று காரணம் கூறுகிறார்கள்.
பெண்கள் பருவமடையும் முன்பாகவே இந்த சடங்கு நிகழ்த்தப்படுகிறது.
ஐந்து முதல் ஏழு வயதுக்குள்ளாகவே சிறுமிகள் ஓடி விளையாடும் பருவத்தில், இழுத்து வலுக்கட்டாயமாக இந்த செயலைச் செய்துவிடுகிறார்கள். இதைச் செய்து முடித்ததும் அந்த பெண் தூய்மையடைந்துவிட்டதாக, அவருடைய தாய் பெருமை கொள்கிறாள்.
அப்படி என்ன தான் செய்யப்படுகிறது அந்த சடங்கில் ?...
முதலில் சடங்கு நிகழ்த்தப்படும் முன் அந்த பெண்ணின் கண் கட்டப்படுகிறது.
பெண்ணுடைய அந்தரங்கப் பகுதியில் உள்ள கிளிட்டோரியஸ் என்பது தான் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பகுதி. பாலுணர்வு உந்துதலுக்குக் காரணமாகும் இந்தப் பகுதியை சாதாரண பிளேடைக் கொண்டு, அந்த கிளிட்டோரியஸ் பகுதியில் உள்ள மேல் தோலை அறுத்து எடுத்துவிடுகிறார்கள்.
இதை சாதாரண மனிதர்களே செய்கிறார்கள். மருத்துவர்கள் கூட முறையாகச் செய்வதில்லை.
கிளிட்டோரியஸ் மேல் தோலை அறுத்த பின்பு அதற்கடுத்து உள்ள லேஃபியா பிளாஸ்டர் என்னும் பெண்ணுறுப்பு உதட்டுப் பகுதியும் அறுக்கப்படுகிறது.
அதற்கடுத்து வெஜைனா பிளாஸ்டி என்னும் பகுதியில் சிறு துளை போட்டு, ஊசி நூல் கொண்டு அந்த இடம் தைக்கப்படுகிறது. இதை சடங்குகளைச் செய்வதற்கென்று இருக்கும் பெண்கள் செய்து முடிக்கிறார்கள்.
இந்த சடங்குகள் முடிந்தபின், அந்த பெண்ணின் கால்கள் அகட்ட முடியாத அளவுக்கு கட்டப்படும். அதன்பின் 40 நாட்கள் அப்படியே இருக்க வேண்டும். 40 நாட்கள் கழித்தே அந்த இடத்தில் ஏற்பட்ட ரணம் ஆறும் என்று கூறப்படுகிறது.
இந்த சடங்கு செய்வதால் பெண்ணின் அழகு அதிகிக்கிறது என்றும் திருமணம் செய்த பின் பாலுணர்வு அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், சிறுவயதில் தைக்கப்பட்ட அந்த இடத்தில் உள்ள நூலை அந்த பெண்ணுக்குத் திருமணம் முடிந்து, அவளுடைய கணவன் தான் அதை அறுத்தெடுப்பாராம்.
இதுதான் அந்த பெண்ணின் கன்னித்தன்மைக்குத் தரப்படும் சான்றாம்.
ஆப்பிரிக்க கிராமங்களில் இன்னும் இந்த சடங்குகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்த சடங்கால் ஒரு பெண் கஷ்டப்பட்டு இறந்த பின், இந்த சடங்கு பற்றி உலகம் முழுவதும் தெரிய வந்தது. அதன்பின் பல நாடுகளில் இம்முறை தடை செய்யப்பட்டது.
உகாண்டாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இது மிகப்பெரிய விழாவாகவே கொண்டாடப்படுகிறது. அதில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு பெண்ணுறுப்பு சிதைப்புச் சடங்கு நடக்கும்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு சட்டங்களும் தடைகளும் விதிக்கப்பட்டாலும் பழங்குடியினரிடம் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இதுபேன்ற சம்பவங்களை தடுக்க முடிவதே இல்லை என ஐநா சபை ஒத்துக்கொண்டுள்ளது.
இன்னும் உலகின் ஒரு மூலையில் ஏதோ ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பு சிதைவு நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.