கருத்தரித்த 10 வயது சிறுமி கருக்கலைப்பு செய்து கொள்ள மறுப்பு

07 Aug,2017
 

.....................
             

பாலியல் வல்லுறவால் கருத்தரித்த 10 வயது சிறுமி கருக்கலைப்புக்கு மறுத்திருப்பது இந்தியா ஊடகங்களின் பெருங்கவனத்தை பெற்றிருக்கிறது.

இந்த சிறுமியின் வாழ்க்கை பற்றி நேரடியாக அறிய இந்தியாவின் வட மாநிலமான சண்டிகாரிலுள்ள நகருக்கு பிபிசியின் கீதா பாண்டே பயணம் மேற்கொண்டார்.

\"14-15 வயதுள்ள பதின்ம வயது சிறுமிகள் பலர் கர்ப்பம் தரித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், 10 வயது சிறுமி கருத்தரித்ததை முதல்முறையாக பார்க்கிறேன்\" என்று சண்டிகர் சட்ட உதவி நிறுவனத்தின் மகாவீர் சிங் தெரிவித்துள்ளார்.




அவள் ஒரு அப்பாவி. அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்று அவருக்கு தெரியாது\"மிகவும் பழகியவர்

உறவினர் ஒருவரால் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதால், 10 வயது சிறுமி கருத்தரித்தாக வெளியான சம்பவம், சண்டிகரையும், இந்தியாவையும் மிகவும் உலுக்கிய வழக்கில் மகாவீர் சிங் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய உறவினர் தற்போது விசாரணையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட இந்த சிறுமி எளிதாக புன்னகை பூக்கும் மகிழ்ச்சியான குழந்தையாக விவரிக்கப்படுகிறார். அவர் வெட்கப்படுபவர். அவ்வளவாக பேச மாட்டார்.
◾ஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம்

6 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு ஆங்கிலமும், கணிதமும் மிகவும் விரும்பமான பாடங்கள். ஓவியங்கள் வரைவதையும் விரும்புகிற அவர் சிறப்பாகவே ஓவியங்கள் வரைகிறார்.

சோட்டி ஆனந்தி (லிட்டில் ஆனந்தி) மற்றும் ஷின் சான் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில், அவருக்கு விரும்பமான நிகழ்ச்சிகள் போதுமானவையாக இல்லை. கோழி இறைச்சி, மீன் மற்றும் பனிக்குழவை (ஐஸ் க்ரீம்) ஆகியவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்.



கருக்கலைப்பு செய்துகொள்ள இந்த சிறுமியின் சார்பாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் 32வது வாரத்தில், அவர் கருத்தரித்து அதிக நாட்கள் கடந்துவிட்டதை காரணம் காட்டி, கருக்கலைப்பு செய்ய கோரிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை 28 ஆம் தேதி நிராகரித்துவிட்டது.

தற்போதைய நிலையில், இவருக்கு கருக்கலைப்பு செய்வது, இந்த சிறுமிக்கு ஆபத்தாக முடியும் என்றும், அவரது வயிற்றிலுள்ள குழந்தை நன்றாகவே வளர்ந்து வருகிறது என்றும் அவரை சோதித்த மருத்துவர்கள் அமர்வு ஒன்று நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பெரியதொரு ஏமாற்றமாக அமைந்துவிட்டது. \"என்ன நடந்தது என்று சிறுமிக்கு தெரியவில்லை\"

20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைப்பதை இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை.

குழந்தையை சுமக்கின்ற தாயின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சான்று அளித்தால் மட்டுமே அதற்கு மேலான வாரங்களான கருவை கலைக்க அனுமதி வழங்கப்படும்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் பலரிடம் இருந்து 20 வாரங்களுக்கு அதிகமாக பிறகும் கருவை கலைப்பதற்கு அனுமதி வேண்டி, அதிக புகார்களை நீதிமன்றங்கள் பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலை பற்றி குழந்தைகளுக்கு அதிகமாக தெரியாது என்பதால், இவ்வாறு கர்ப்பம் தரித்திருப்பது மிகவும் தாமதமாகவே தெரிய வருகிறது.

இந்த 10 வயது சிறுமியின் சம்பவத்திலும், மூன்று வாரங்களுக்கு முன்னதாக, அடிவயிற்றில் வலி எடுக்கிறது என்று அவர் தெரிவித்தவுடன், மருத்துவரிடம் தாய் அழைத்து சென்ற பின்னர்தான் கருத்தரித்திருப்பது கண்டறியப்பட்டது.


பாலியல் தாக்குதல்
\"அவள் ஒரு அப்பாவி. அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்று அவருக்கு தெரியாது\" என்கிறார் அவரிடம் அடிக்கடி பழகும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் நல்ல ஆரோக்கியமான குழந்தை என்பதால், மகப்பேற்றுக்கான தொடக்கக்கால அறிகுறிகளையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர். தங்களின் மகள் 10 வயதில் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் கற்பனை செய்தும் பார்த்திருக்கவில்லை.

கருவுற்றிருப்பது இன்னும் இந்த சிறுமியிடம் தெரிவிக்கப்படவில்லை. அவரோடு பேசி, கையாள்பவர் அனைவருமே மிதமாகவே ஈடுபடுகின்றனர்.

அவருடைய வயிற்றில் பெரிய கல் இருக்கிறது என்றும், அதனால்தான், வயிறு வீங்கியுள்ளது என்றும் அவருக்கு கூறப்பட்டுள்ளது.

முட்டை, பால் பழங்கள், மீன் மற்றும் கோழி இறைச்சி என சிறப்பு உணவுகள் அவருக்கு வழங்கப்படுகிறது. அதிக கவனம் அவர் மீது செலுத்தப்படுவதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

காதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனை

மோதியை எதிர்த்ததால் சமூக வலைத்தளத்தில் பாலியல் தாக்குதல்: ஜோதிமணி புகார்

ஆனால், சமீபத்திய நாட்களில், காவல்துறையினர், சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துநர்கள் ஆகியோர் இந்த சம்பவத்திற்குள் வந்துள்ளதுடன், வீட்டிற்கு வெளியில், ஊடகங்களின் கவனம் அதிகரித்துள்ளது.

\"சரியான பிரச்சனை, இந்த சூழ்நிலையின் காரணம் என்ன என்பதை அவர் புரியாமல் போகலாம். ஆனால், அவருக்கு சற்று புரிந்துள்ளது\" என்று மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என்று அவருடைய பெற்றோர் போராடி வருகின்றனர். அவரது குடும்பம் சிறியதொரு அறையுடைய அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

அவருடைய தந்தை அரசு ஊழியர். தாய் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.


பெண்
இந்த வழக்கை விசாரித்து வருகின்ற காவல்துறை பெண் அதிகாரி பிரதிபா குமாரி, இந்த குடும்பம் மிகவும் எளிமையான நல்ல குடும்பம். தன்னுடைய மகளுக்கு இந்த மனிதர் என்ன செய்கிறார் என்று கூட உணராமல் இருந்துள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த பெற்றோர் மிகவும் கலங்கி குழும்பியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறும் அவர் \"அவரது தாய் என்னிடம் எப்போதும் அழாமல் பேசியதில்லை. தன்னுடைய மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உணர்வதாக தந்தை தெரிவிக்கிறார்\" என்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் துஷ்பிரயோகங்கள்


◾ஒவ்வொரு 155 நிமிடங்களுக்கு ஒருமுறை 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையும், ஒவ்வொரு 13 மணிநேரத்திற்கும் ஒரு 10 வயதுக்குட்பட்ட குழந்தையும் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்.
◾2015 ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கு அதிகமான குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
◾இந்தியாவில் வாழும் 240 மில்லியன் பெண்கள், தாங்கள் 18 வயது நிறைவடைவதற்கு முன்பே திருமணமாகிவிடுகின்றனர்.
◾அரசு ஆய்வில் பங்கேற்ற 53.22 சதவீத குழந்தைகள் ஏதோ ஒரு வடிவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதை ஒப்பு கொண்டுள்ளனர்.
◾இந்த துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரில் 50 சதவீதத்தினர், குழந்தைக்கு தெரிந்தவர்கள் அல்லது \"நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் பராமரிப்பு வழங்குவோராக\" உள்ளனர்.

ஆதாரங்கள்: இந்திய அரசு, யுனிசெப்

இந்த பாலியல் வல்லுறவு மற்றும் கர்ப்பம் தரித்திருப்பது செய்தித்தாள்களின் தலைப்பு செய்திகளில் வெளிவர தொடங்கி, பத்திரிகையாளர்களால் அவர்கள் வேட்டையாடப்படுவதுது, அவர்களின் சூழ்நிலையை மிகவும் மோசமாகியுள்ளது.

\"இந்த சிறுமியின் தந்தை என்னை பார்க்க வந்துபோது, ஊடகங்கள்தான் தன்னுடைய பெரிய பிரச்சனை என்று தெரிவித்தார். தன்னுடைய வீட்டுக்கு வெளியே எப்போதும் பத்திரிகையாளர்கள் காணப்படுகின்றனர். என்னுடைய அந்தரங்க உரிமை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது\" என்று குழந்தைகள் நலவாழ்வு கமிட்டியின் தலைவர் நீல் ராபர்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சிறுமிக்கு சிறந்த மருத்துவ பராமரிப்பு பெற வேண்டும், அரசிடம் இருந்து நிதி இழப்பீடு பெற தகுதியுண்டு என்பதை காட்டுவதாக ஊடகங்களின் இந்த கவனம் பொருள்படுகிறது.

ஆனால், விரும்பப்படாத இந்த விளம்பரம் பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்கு அதிக கவலையை வழங்கியுள்ளது. தந்தை அலுவலகத்திற்கு சென்றிருக்கும் நேரத்தில் இவர்களின் வீட்டுக்கு குழந்தைகள் நல பணியாளர்கள் என்று கூறிக்கொண்டு, பல பத்திரிகையாளர்கள் வந்துள்ளனர்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies