மல்லிகை மலரை, மங்கையர்கள் கூந்தலில் சூடி வந்தால் குணமாகும் நோய்கள்
05 Aug,2017
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மங்கையர்கள் கூந்தலில் சூடும் மலர்களின் நறுமணத்தால் பல நோய்கள் குண மாகின்றன என்று
சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. மலர்களில் தனக்கெ ன ஓரிடத்தை பிடித்திருக்கும் மல்லிகை மலர்கள் வாசம் கூட மருத்துவ குணம் படைத்ததாக நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மங்கையர்கள், இந்த பாதிப்புக்களிலிருந்து விடுபட மருத்துவரை தேடி ஓடியும், கண்ட கண்ட மருந்துகளையும் சாப்பிட்டு பின்விளைவுகளும் பக்கவிளைவுகளும்வந்து அவதிப்ப டுவதைவிட, மேற்சொன்ன பாதிப்புகளுக்குள்ளான மங்கையர்கள், தேவையான அளவு அல்லது விரும்பிய அளவு மல்லிகை மலர் சரம் வாங்கி அதனை அப்படியே அவர்களின் கூந்தலில் சூடவேண்டும். இதே போல் தினமும் செய்துவந்தால், மல்லிகையின் நறுமணமானது அம்மங்கையர்களை மன அழுத்தம் மற்றும் உடல் சூட்டில் இருந்து முழுமையாக விடுவித்து அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும் உள்ளத்தை உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.