லண்டன் பிரிட்ஜில் பயங்கரவாதிகள் ஒருவரை குத்தும்போது பொலிஸார் அவர்களை சுட்டுக்கொல்லும் காணொளி
09 Jun,2017
............................
லண்டன் பிரிட்ஜில் சில தினங்களுக்கு முன்னர் வான் மூலம் பொதுமக்களை இடித்து தள்ளியும் பின்னர் கத்தியால் பொதுமக்களை குத்தியும் கொலை செய்த பயங்கரவாதிகள் இறுதியாக ஒருவரை குத்திக்கொல்லும்போது பொலிஸாரால் அவர்கள் சுட்டு கொல்லப்படும் சி. சி. ரி. வி பதிவு வெளியாகியுள்ளது.
இந்த காணொளியில் போரோ சந்தை பகுதியில் ஒருவரை பயங்கரவாதிகள் குத்தும்போழுது போலீசார் தமது காரில் வந்து இறங்குகின்றனர். அவர்கள் வந்த கார் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே அதில் இருந்து குதித்த பொலிஸார் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்கின்றனர்.
ஒரு போலீஸ் அதிகாரி பயங்கரவாதி ஒருவர் மீது பாய்ந்து அவர் மீது வீழ்கிறார். மீண்டும் அவர் எழும்பொழுது பொலிஸாரின் மற்றைய கார் அந்த இடத்துக்கு வருகிறது.
எல்லாமாக 48 சுற்று துப்பாக்கி சூடு அவர்கள் மீது நடத்தபப்டுகிறது. மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்படுகின்றனர். இவை அனைத்துமே பயங்கரவாதிகள் தமது கார் மூலம் பொதுமக்களை இடிக்கத்தொடங்கி 8 நிமிடங்களுக்குள் நடந்து முடிவடைகிறது.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் 5 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர்.
இந்த மூன்று பயங்கரவாதிகளின் குடும்பத்தினரும் அவர்களின் இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்துள்ளனர்