டென்மார்க்கில் உயிருக்கு போராடும் இலங்கையர் -
29 Apr,2017
..........................
டென்மார்க்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய இலங்கையர் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கசுன் நிரோஷன் பேர்டினன்ட் என்ற 36 வயதுடைய இலங்கையரே விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த கோர விபத்து கடந்த திங்கட்கிழமை Kentdale பகுதியில் உள்ள அதிவேகப் பாதையில் ஏற்பட்டுள்ளது.
குறித்த இலங்கையரின் கார், மரம் ஒன்றுடன் மோதியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிரோஷன் பேர்டினன்ட் ரோயல் பர்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டென்மார்க்கில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நிரோஷன் பணியாற்றி வந்துள்ளார்.
நிரோஷன் அன்பானவர், சிறந்த சமையற்காரர் என டென் மார்க் சமூகத்தில் மதிப்பு பெற்றவர் என விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அவரது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் டென்மார்க்கிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிரோஷனின் சகோதரர் இன்றைய தினம் டென்மார்க் விஜயம் மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையர் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து காரை மரத்துடன் மோதினார் னஎன்பது தொடர்பில் டென்மார்க் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நிரோஷனின் குடும்பத்தினருக்கு 5000 பெறுமதியான அமெரிக்க டொலரை பெற்றுக் கொடுக்க விடுதி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக GoFundMe என்ற பக்கத்தை உருவாக்கி உதவி கோரியுள்ளனர்.