..............
ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-சிம்மம்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்,)
பேச்சால் மற்றவர்களைக் கவர்பவர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், முடியாத காரியத்தையும் முடித்துக்காட்டுவீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். செவ்வாய் 10-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும்.
18.12.17 வரை சனி பகவான் அர்த்தாஷ்டமச் சனியாகத் தொடர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகும். வீண் பழிகள் ஏற்படக்கூடும். 19.12.17 முதல் சனி 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் வருங்காலம் கவலை தரக்கூடும். மகளின் திருமணத்துக் காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பாகப்பிரிவினை விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
12.7.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 12-ல் மறைவதால், பணத் தட்டுப்பாடு, சகோதர சகோதரி களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். 14.1.18 முதல் 7.2.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஈகோ பிரச்னையால் கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படும் என்பதால், பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.
குரு 1.9.17 வரை 2-ல் தொடர்வதால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை திருப்பித் தருவீர்கள். ஆனால், 2.9.17 முதல் குருபகவான் 3-ல் அமர இருப்பதால், காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். எந்த ஒரு வேலையையும் போராடித்தான் முடிக்க வேண்டி இருக்கும். இளைய சகோதரர் உதவி யாக இருப்பார். எனினும், பணத் தட்டுப் பாடு அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தாய்வழியில் கிடைக்கவேண்டிய சொத்துகளைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம்.
26.7.17 வரை 1-ல் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், முன்கோபம், மன சஞ்சலம் ஏற்படக்கூடும்.வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 27.7.17 முதல் 12-ல் ராகு அமர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து செல்லும். மன அமைதி இல்லாமல் தவிப்பீர்கள். தன்னம்பிக்கை குறையக்கூடும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால், 27.7.17 முதல் கேது 6-ல் அமர்வதால், வி.ஐ.பிக்களால் நன்மை உண்டாகும். உங்களை ஏமாற்றியவர் களைப் புரிந்துகொள்வீர்கள். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.
வியாபாரத்தில் குறைவான லாபம் வைத்து அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். புரட்டாசி மாதத்தில் இருந்து வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலா கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நபர் புது பங்குதாரராக இணைய வாய்ப்பு இருக்கிறது. கொடுக்கல் – வாங்கல் சுமுகமாக இருக்கும். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில், புரட்டாசி மாதம் புது வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவர். சில கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். சக பணியாளர்களது ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
மாணவ – மாணவிகள், நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார் கள். ஆசிரியர்களது பாராட்டுகளைப் பெறுவார்கள். பெற்றோர் மூலம் தேவைகள் நிறைவேறும். இலக்கியப் போட்டிகளில் முதலிடம் பெறுவார்கள்.
கலைத் துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவ அறிவாலும், இங்கிதமான பேச்சாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
வேலூர் மாவட்டம் தக்கோலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதீஸ் வரரை வில்வார்ச்சனை செய்து வணங்கிட நினைத்தது நிறைவேறும்.
ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-கடகம்
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களே!
உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திரன் 4-ல் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால், வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும்.
செவ்வாய் 11-ல் அமர்ந்திருப்பதால், பெற்றோருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு, நல்ல வேலை கிடைக்கும். ராசிக்கு 9-ல் சுக்கிரனும் புதனும் அமர்ந்திருப்பதால், வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும்.
1.9.17 வரை குரு 3-ல் தொடர்வதால், பணத்தட்டுப் பாடும் தவிர்க்கமுடியாத செலவுகளும் இருக்கும். சின்னச் சின்ன வேலைகளும் தடைப்பட்டு முடியும். 2.9.17 முதல் குரு பகவான் 4-ல் அமர்வதால், அலைச்சலும் ஏமாற்றங்களும் ஏற்படும். தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 14.2.18 முதல் 13.4.18 வரை குருபகவான் வக்கிரத்திலும் அதிசாரத்திலும் 5-ல் அமர்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் திருமணம் கூடிவரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள்.
18.12.17 வரை சனி பகவான் 5-ல் இருப்பதால், உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால், அவர்களை அனுசரித்துச் செல்லவும். எந்த விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். 19.12.17 முதல் சனி 6-ல் அமர்வதால், வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பதவி களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடை நீங்கும். வழக்கு சாதகமாகும். வருமானம் உயரும்.
26.7.17 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்ப தால், பேச்சில் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் செய்து முடிப்பது நல்லது. கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.
27.7.17 முதல் ராகு 1-லும் கேது 7-லும் தொடர்வதால், உணவு விஷயத் தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணைவர் உங்களது குறைகளைச் சுட்டிக்காட்டினால், பொறுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
26.5.17 முதல் 28.8.17 வரை செவ்வாய் 12-ல் மறைவதால், சிறு சிறு விபத்துகள், பொருள் இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். சகோதர – சகோதரிகளுடன் மனவருத்தம் உண்டாகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 22.12.17 முதல் 14.1.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சலசலப்புகள் எழும்; வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில், தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-க்களின் தொடர்பால் வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும்.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வருவார்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனி, மாசி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. உங்களை தரக் குறைவாக நடத்திய அதிகாரியின் மனம் மாறும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். கணினி துறையைச் சேர்ந்தவர் களுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.
மாணவ – மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யுங்கள். கலைத் துறையினர், விமர்சனங்களையும் கடந்து முன்னேறுவார்கள். உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு. திரைக்கு வரமுடியாமல் இருந்த உங்களின் படைப்புகள் வெளியாகி வெற்றி பெறும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கை யாலும் உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்
அறந்தாங்கிக்கு அருகிலுள்ளது துரையரசபுரம். இங்குள்ள ஸ்ரீகாதமறவர் காளியம்மன் ஆலயத்துக்கு, வெள்ளிக் கிழமைகளில் சென்று குங்குமார்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். மகிழ்ச்சி கூடும்.
ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மிதுனம்
மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)
நேருக்குநேராகப் பேசுபவர்களே!
ராசிக்கு 6-ல் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், பல சாதனைகளைச் செய்வீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வழக்கு களில் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் நீங்கும். எனினும், செவ்வாய் 12-ல் இருப்ப தால், சகோதரர்களுடன் மன வருத்தம் ஏற்படலாம்.வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் செலவுகள் அதிகரிக்கும். ஆவணி முதல் மகிழ்ச்சி உண்டாகும்.
1.9.17 வரை குரு 4-ல் இருப்பதால், அலைச்சலும் ஏமாற்றங்களும் உண்டு. தாயாரின் உடல்நலன் பாதிக்கும். 2.9.17 முதல் குரு 5-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். ஆனால், 14.2.18 முதல் 13.4.18 வரை குரு வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் 6-ல் சென்று மறைவதால், பணத் தட்டுப்பாடும் சிறுசிறு கடன் பிரச்னைகளும் வந்து நீங்கும்.
18.12.17 வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
ஆனால், 19.12.17 முதல் சனிபகவான் 7-ல்அமர்வதால், கணவன் – மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வாழ்க்கைத் துணைவருக்கு சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.
26.7.17 வரை ராகு 3-ல் தொடர்வதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், கேது 9-ல் இருப்பதால், தந்தை வழி உறவினரோடு சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். 27.7.17 முதல் ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.மற்றவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
15.10.17 முதல் 2.12.17 வரை செவ்வாய் 4-ல் அமர்வதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 10.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாயும் சனியும் 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். சொத்து விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
வியாபாரத்தில் செப்டம்பர் முதல் பற்று, வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். ஆனால், 19.12.17 முதல் சனி பகவான் 7-ல் மறைவதால், பங்குதாரர்களுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழிலில் ஈடுபட வேண்டாம். பெரிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வியாபாரம் நன்றாக நடக்கும். உணவு, துணி, ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். செப்டம்பர் முதல் குரு பகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
மாணவ-மாணவிகள் திறமை களை வளர்த்துக்கொள்வார்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பாடப் பிரிவுகளில்- விரும்பும் பள்ளி, கல்லூரி களில் சேரும் வாய்ப்பு உண்டு. உங்களால் பெற்றோருக்கு புகழும் கௌரவமும் கூடும்.
கலைத் துறையினரே! உங்களுடைய யதார்த்தமான படைப்பு கள் அனைவராலும் பாராட்டப்படும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. சம்பள பாக்கி கைக்கு வரும். புகழ்பெற்ற கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் முற்பகுதி செலவுகளையும், ஆரோக் கியக் குறைவுகளையும் தருவதாக அமைந்தாலும், வருடத்தின் மையப் பகுதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சியை யும் பணவரவையும் உண்டாக்கும்.
பரிகாரம்
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகைக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-ரிஷபம்
ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களே!
சந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 5-வது வீட்டிலேயே தொடர்வதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். பிள்ளைகளுடைய உயர்கல்வி அல்லது உத்தியோகம் குறித்த முயற்சிகள் வெற்றியடையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆனால், 2.9.17 முதல் குரு 6-ல் மறைவதால், சேமிப்புகள் குறைந்து கடன்சுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
14.2.18 முதல் 13.4.18 வரை குரு அதிசாரத்திலும் வக்கிரகதியிலும் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பும், பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வும் கிடைக்கும்.
18.12.17 வரை சனி 7-வது வீட்டில் இருப்பதால், வாழ்க்கைத்துணைக்குச் சிறிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும். மேலும் 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். வழக்குகளில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி தீர்க்கவும்.
26.7.17 வரை ராகு 4-ல் இருப்பதால், தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். தாய்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 27.7.17 முதல் ராகு உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். 26.7.17 வரை கேது 10-ல் தொடர்வதால், வேலைகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தேவையில்லாத இடமாற்றம் ஏற்படக் கூடும். 27.7.17 முதல் கேது 9-ல் சென்று அமர்வதால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும்.
11.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், வீடு, மனை வாங்குவது விற்பதில் எச்சரிக்கை அவசியம். சகோதரர் களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். பணம் கொடுக்கல் – வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் புதன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பிள்ளைகள் சாதிப்பார்கள்.
வியாபாரத்தில் ஆகஸ்ட் மாதம் வரை லாபம் அதிகரிக்கும். ஆனால், சனி 7-லும் தொடர்ந்து 8-லும் தொடர இருப்பதால், வியாபார ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளா தீர்கள். பங்குதாரர்களுடன் மனத் தாங்கல் ஏற்படக் கூடும். ஒரு சிலருக்கு தனியாக வியாபாரம் செய்யவேண்டிய நிலையும் உண்டாகும். உங்களுக்கு அனுபவம் இல்லாத துறைகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் 6 முதல் குரு 6-ல் மறைவதால், எதிலும் எச்சரிக்கை தேவை. வாகனம், போர்டிங், லாட்ஜிங், கமிஷன் வகை களால் லாபம் அதிகரிக்கும். தெலுங்கு, இந்தி பேசுபவர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
உத்தியோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை சலுகைகள் கிடைக்கக்கூடும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செப்டம்பர் முதல் பிப்ரவரி முற்பகுதி வரை வேலைச் சுமையும் அலைச்சலும் இருக்கும். பிப்ரவரி மாதக் கடைசி முதல் ஏப்ரல் வரை பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். 19.12.17 முதல் அஷ்டமத்துச் சனி தொடர்வதால், வேலை அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்று நம்பி எவரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்.
சனி பகவான் 7-ல் இருப்பதால், மாணவ – மாணவிகள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருக்க வும். நல்ல வாய்ப்புகள் வரும். பாதியில் நின்றிருந்த பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தியாகும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, செலவுகளைத் தருவதாக இருந்தாலும், வருடத்தின் இறுதிப்பகுதி மகிழ்ச்சி தருவதாக அமையும்.
பரிகாரம்
தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீதீர்த்த கிரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வசதி, வாய்ப்புகள் பெருகும்.
‘ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மேஷம்
மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே!
சுக்கிரன் ராசிக்கு 12-ல் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் ஹேவிளம்பி புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தேவையான வங்கிக் கடனும் கிடைக்கும். குருபகவான் 1.9.17 வரை 6-வது வீட்டில் மறைந்திருப்பதால், செலவுகளும் கடன் பிரச்னைகளும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், வெளிநாட்டுப் பயணம் போன்ற விஷயங்கள் சற்று தடைபட்டே முடியும்.
ஆனால், 2.9.17 முதல் 13.2.18 வரை குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய கடன்கள் தீரும். 14.2.18 முதல் 13.4.18 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்கிரகதியிலும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் அமர்வதால், பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். 26.7.17 வரை உங்களுடைய ராசிக்கு 11-ல் கேது இருப்பதால், பிரபலங்களின் உதவியால் முன்னேற்றம் காண்பீர்கள். கணிசமான பணவரவு உண்டு.
26.7.17 வரை ராகு 5-வது வீட்டிலேயே அமர்ந்திருப்ப தால், பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங் களும் இருந்துகொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் அவசரம் வேண்டாம். 27.7.17 முதல் ராகு 4-ல் தொடர்வதால், தாயாரின் உடல்நலன் பாதிக்கப் படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், பிரச்னைகளும் வரும். 27.7.17 முதல் வருடம் முடியும் வரை கேது 10-ல் அமர்வதால், உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும்.
18.12.17 வரை சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது மனச்சலனமும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். பணம் கொடுக்கல் – வாங்கலில் எச்சரிக்கை தேவை. 19.12.17 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் 9-வது வீட்டில் வந்து அமர்வதால், காரியத் தடைகள் விலகும். மனக் கவலைகள் நீங்கும். எனினும், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
14.4.17 முதல் 26.5.17 வரை சனியும், செவ்வாயும் நேருக்கு நேர் பார்வையிடுவதாலும், 12.7.17 முதல் 30.8.17 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி இருப்பதாலும், 20.1.18 முதல் 10.3.18 வரை செவ்வாய் எட்டில் மறைவதாலும், 11.3.18 முதல் 13.4.18 வரை சனியும், செவ்வாயும் ஒன்று சேருவதாலும் இந்தக் காலக் கட்டத்தில் வீடு, மனை வாங்குவது விற்பதில் எச்சரிக்கை தேவை.சகோதரர்களுடன் மோதல்கள் எழலாம்.சிலருக்கு சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அனுமனை வழிபடுவது நல்லது.
10.10.17 முதல் 5.11.17 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்கிரன் 6-வது வீட்டில் சென்று மறைவதால், கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வந்து போகும். 17.11.17 முதல் 15.12.17 வரை சூரியனும் சனியும் 8-ல் சேர்ந்திருப் பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளிலும், பிள்ளைகளின் திருமண விஷயத்திலும் பொறுமை அவசியம்.
வியாபாரத்தில் 2.9.17 முதல் குரு பகவான் 7-ல் அமர்வதால், புதிய முதலீடுகள் செய்வீர்கள். பங்குதாரர் களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பெரிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உணவு, கெமிக்கல், வாகனம், கன்ஸ்ட்ரக்ஷன் வகைகளில் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை வேலைச்சுமை இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் பதவி, சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கும் முயற்சி செய்யலாம்.
மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் முதல் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவார்கள். கலைத் துறையினருக்குத் தடைப்பட்டிருந்த வேலைகள் செப்டம்பர் முதல் விரைந்து முடியும். வேற்றுமொழிப் பட வாய்ப்பு களால் புகழ் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும், மையப்பகுதி பணவரவைத் தருவதாகவும், இறுதிப்பகுதி சுபச் செலவுகளை ஏற்படுத்துவதாகவும் அமையும்.
பரிகாரம்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டு வாருங்கள். நீங்கள் தொட்டது துலங்கும்.
ஹேவிளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்-மீனம்
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உயர்ந்த லட்சியத்துடன் வாழ்பவர்களே!
ராகு 6-ம் வீட்டில் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், வருமானம் அதிகரிக்கும். கடன் குறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ஆனால், சந்திரன் 8-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், எளிதாக முடிய வேண்டிய விஷயங் களைக் கூட கொஞ்சம் சிரமப்பட்டு முடிப்பீர்கள்.
1.9.17 வரை உங்களின் ராசிநாதனாகிய குரு 7-வது வீட்டிலேயே தொடர்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். 2.9.17 முதல் 13.2.18 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக நடத்துக் கொள்ளுங்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.
14.2.18 முதல் 13.4.18 வரை 9-ம் வீட்டில் குரு அமர்வதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
16.9.17 முதல் 10.10.17 வரை சுக்கிரன் 6-ல் அமர்வதால், கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். 1.12.17 முதல் 20.1.18 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால், சகோதரர்களுடன் கருத்துமோதல்கள் வரும். செலவுகள் அதிகமாகும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
26.7.17 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்ப தால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக் கும். ஆனால், 27.7.17 முதல் இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது அமர்வதால், எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகள் சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலமாக சில காரியங் களை சாதிப்பீர்கள். ஆனால் 5-ல் ராகு நிற்பதால், பூர்வீகச் சொத்தில் சட்டச் சிக்கல் வரும்.
சனி பகவான் 18.12.17 வரை 9-ம் வீட்டில் நீடிப்பதால், வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். சிலருக்கு, தந்தையுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.
19.12.17 முதல் 13.4.18 வரை 10-ம் வீட்டில் அமர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளி வட்டாரங் களிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களது செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போகவும். மார்கழி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டுத் தொடர்புடைய புது பங்குதாரர்கள் உங்களுடன் இணைய வாய்ப்பு உண்டு. உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்புப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
மாணவ-மாணவிகளுக்கு தேர்வில் வெற்றியும் அதிக மதிப்பெண் ணும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் அதிகரிக்கும். கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வார்கள்.
கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களின் சாதனைகளை அதிகப் படுத்துவதுடன், அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்
திருச்சி, லால்குடிக்கு அருகிலுள்ளது மணக்கால். இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணிய சுவாமியை, சஷ்டி திதி நாள்களில் சென்று தரிசித்து வழிபடுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.