கல்லறையில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: பொலிசார் அதிர்ச்சி தகவல்
24 Jan,2017
கல்லறையில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: பொலிசார் அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்து நாட்டில் உள்ள கல்லறை ஒன்றில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Cheadle கிராமத்தில் St Mary’s என்ற தேவாலயம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று பெயர் வெளியிடப்படாத இளம்பெண் ஒருவர் பொலிசாரிடம் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதில் ‘தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறையில் தன்னை ஒருவன் கற்பழித்துவிட்டதாக’ கூறியுள்ளார்.
இச்சம்பவம் மக்கள் யாருமில்லாத அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததாகவும் அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் கல்லறைக்கு சென்று அப்பகுதி முழுவதையும் சீல் வைத்து அடைத்தனர். பின்னர், தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்களை சேகரித்தனர்.
பொலிசாருக்கு சில ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும் அவற்றை தற்போது வெளியிட முடியாது என மறுத்துவிட்டனர்.
தேவாலய கல்லறையில் இளம்பெண்ணை கற்பழித்த அந்த மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் பிரித்தானியா செய்தி