காலையில் சாப்பிடலனா இந்த பிரச்சனை வருமாம்:
05 Jan,2017
காலையில் சாப்பிடலனா இந்த பிரச்சனை வருமாம்
இரவு உணவுக்கு பின்னர் 6லிருந்து 10 மணி நேரம் வரை ஏதும் சாப்பிடாமல் இருக்கிறோம். அதனால் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாக செயல்ப்பட உடலுக்கு உணவு நிச்சயம் தேவைப்படுகிறது.
அதிலும் கார்போஹைட்ரேட், புரதம், மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காலை சிற்றுண்டியில் இருக்கவேண்டியது அவசியமாகும்.
மேலும், மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக்கிறது.
காலை சிற்றுண்டியை சாப்பிடாமல் தவிர்த்தால்
காலை சிற்றுண்டியை தவிர்க்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சோர்வு, நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகள் வரும்
காலை சிற்றுண்டி சாப்பிடாத இளம் வயதினருக்கு குமட்டல், சோர்வு, அல்சர், முடி உதிர்தல் போன்ற தொல்லைகள் ஏற்ப்படும்.
காலை உணவை தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதய நோய்கள், மனசோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்ப்படலாம்.