பட்டர் இறால் முட்டை மசாலா
15 Oct,2016
•பட்டர் - 2/3 தேக்கரண்டி
•இறால் - ஒரு கப்
•வேக வைத்த முட்டை - 4
•வெங்காயம் (பெரியது) - 2
•தக்காளி (பெரியது) - 2
•பட்டை - சிறிது
•கிராம்பு - ஒன்று
•ப்ரிஞ்சி இலை - ஒன்று
•சோம்பு - சிறிது
•மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
•மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
•சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
•உப்பு - தேவையான அளவு
•கறிவேப்பிலை - சிறிது
இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் பட்டர் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
இறால் வெந்ததும் சோயா சாஸ் ஊற்றிக் கிளறவும். மசாலா திக்கானதும் அதனுடன் முட்டைகளை குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும்.
சுவையான பட்டர் இறால் முட்டை மசாலா தயார். சாத்தில் போட்டுச் சாப்பிட அல்லது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.