முதல்வர் ஜெயலலிதா நன்றாகத்தான் இருக்கிறார்.. ஆதாரம் என்ன தெரியுமா?
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா, சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிடும்படி, திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள்விடுக்கும் அளவுக்கு வதந்திகள் றெக்கை முளைத்து சுற்றித் திரிகின்றன.
அதேநேரம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், நேற்றுடன் சேர்த்து 5 முறை ஜெயலலிதா உடல் நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக அளித்தது. அனைத்திலுமே ஜெயலலிதா நலமடைந்து வருவதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக தகவல் இல்லை
முந்தைய அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருந்ததை அப்பல்லோ தெரிவித்திருந்தது. நேற்றைய அறிக்கையில், பழைய சிகிச்சையே தொடருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிக்கையில் ஒரு விஷயத்தை கவனித்து பார்த்தால் புரியும். அறிக்கையில், சிகிச்சை பற்றிய அதிகப்படியான தகவல்களை தெரிவிப்பதை மருத்துவமனை தவிர்த்து வருகிறது.
[Read more: அப்பல்லோ மருத்துவமனையும், அந்த ஐந்து அறிக்கைகளும்!]
மிகுந்த மரியாதை
அதேநேரம், Honorable Chief Minister என்ற வார்த்தையை வரிக்கு வரி பயன்படுத்துகிறது மருத்துவமனை நிர்வாகம். அறிக்கையில் பாதி வரிகள் Honorable Chief Minister என்பதாகத்தான் உள்ளது. ஜெயலலிதாவுக்கு கட்சியினரும், அதிகாரிகளும், அமைச்சர்களும் மிகுந்த மரியாதை கொடுத்து பேசுவது வழக்கம். எதிரில் கூட பவ்யமாகத்தான் நிற்பார்கள். மாண்புமிகு, புரட்சித் தலைவி, இதய தெய்வம் அம்மா என்றுதான் சட்டசபையில் கூட சக கட்சியினர் பேச தொடங்குவார்கள்.
இந்த டிவிட்டை பாருங்க
இந்நிலையில்தான், அப்பல்லோ ஆஸ்பத்திரி தனது அறிக்கையில், இத்தனை முறை Honorable Chief Minister என்ற வார்த்தையை போட்டு மிகவும் பவ்யம் காட்டுவதை பார்த்தால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறுகிறது ஒரு டிவிட். ஜெயலலிதா இந்த அறிக்கைகளை படிக்கிறார் அல்லது படிப்பார் என்ற ஒரு பதற்றம் அறிக்கையை தயாரிப்போரிடம் இருப்பதால்தான் இத்தனை மரியாதை என்று கூறுகிறது இந்த டிவிட்.
இது வழக்கம்தானாம்
ஆனால் முதல்வர் என்ற பதவிக்காக யாராக இருந்தாலும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கை வெளியிடுவது மருத்துவமனை நிர்வாகங்களின் பணி என்று கூறப்படுகிறது.
அப்பல்லோவில் ஆல்-இன்-ஆல் சின்னம்மா.. அமைச்சர்கள் எல்லோரும் சும்மா
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்களுக்கு கூட இல்லாத முன்னுரிமை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கிடைத்து வருவது அதிமுக தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கு, முதல்வரிடம் இல்லாத உரிமை தனிப்பட்ட நபர்களுக்கு கிடைத்தது எப்படி என்பது நடுநிலையாளர்கள் கேள்வி.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை, அண்ணா சாலை பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அன்று முதல், அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர்தான், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் தங்கியுள்ளனர். இவர்களுக்கு 2வது மாடியில் தனி அறைகளே ஒதுக்கப்பட்டுள்ளனவாம். வேறு ஆண்கள் மட்டுமல்ல, பெண் அமைச்சர்களுக்கு கூட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்குள் போக அனுமதியில்லை என கூறப்படுகிறது. டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தவிர வேறு யாரும் ஜெயலலிதா அருகில் செல்லகூட அனுமதியில்லை என்கிறது அப்பல்லோ வட்டாரங்கள்.
பார்க்க முடியாமல் தவிப்பு
ஆனால், சசிகலா மட்டுமின்றி, அவரது உறவுக்காரர்களும் அப்பல்லோவில் முகாமிட்டுள்ளதுதான் அதிமுக விசுவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அபிமான தலைவரை பார்க்க முடியாமல் அமைச்சர்கள் பலரும் புழுங்கி வருவதாக கூறப்படுகிறது.செவ்வாய்க்கிழமை டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி, சசிகலா வழக்கறிஞர், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் அப்பல்லோ வந்து சென்றனர். ஜெய் ஆனந்த் இரவு 09.05 மணி அளவில் காரில் வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் 9.58க்கு காரில் உள்ளே சென்றுள்ளார்.
பன்னீர்செல்வத்தாலும் முடியலையாம்
நீலநிற சட்டை போட்ட ஒருவரை காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு 10 மணிக்கு மீண்டும் வெளியே சென்றார். இதனிடையே சசிகலாவும் காரில் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள அமைச்சர் ஓ.
சாலைகளில் காத்திருப்பு
அமைச்சர்களுக்காவது மருத்துவமனை உள்ளே அனுமதி கிடைக்கிறது. ஆனால் அதிமுக நிர்வாகத்தில் முன்னணியில் இருந்த பலருக்கு மருத்துவமனைக்கு உள்ளே கூட அனுமதி கிடைக்கவில்லை. அவர்கள் சாலையில் காத்துக்கிடக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா போன்றோர் கோயில்களில் மண் சோறு சாப்பிட்டுக் கொண்டுள்ளனர்.
ஆளுநரும் சந்திக்கவில்லையாம்
ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்றபோதுகூட வார்டு வரைதான் அனுமதிக்கப்பட்டதாகவும், முதல்வரோடு பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அவரது அறிக்கையில் இடம்பெற்ற வரிகளை சுட்டிக் காட்டி இவ்வாறு கூறப்படுகிறது. தனிப்பட்ட நபர் என்றால் இக்கேள்விகள் எழாது. மாநில முதல்வர் என்பதால் அவரை உடனிருந்து கவனிப்போர் யார், அரசு நிர்வாகத்தில் அங்கமாக இருப்போரை விட அவர்கள் மேலானவர்களா என்ற கேள்விகள் சாமானியர்களுக்கும் எழுவது சகஜமானது.
மக்களின் கோபம்
அரசியல் கட்சி தலைவர்களான திருமாவளவன், வேல்முருகன் போன்றோரும் முதல்வர் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து எந்த ஒரு எதிர்க்கட்சியும் கேள்வி எழுப்பவும் இல்லை. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இதையெல்லாம் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது மக்களின் கோபத்தை, அதிமுகவினர் திசை திருப்பி விட வாய்ப்புள்ளதே எதிர்க்கட்சிகளின் பயத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சின்னம்மா எல்லாம்
ஆளும் கட்சி வட்டாரத்திலோ, சின்னம்மா என்று அழைக்கப்படுபவரை பகைத்துக் கொண்டு எப்படி காலம் தள்ளுவது என்ற கவலை. எனவே முதல்வரை யார் கவனித்துக்கொள்கிறார்கள், அதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை வெளிக்கொண்டு வருவதில் கூட யாருக்கும் அக்கறையில்லாமல் போயுள்ளது.
அப்பல்லோவுக்கு வெளியில்தான் குழப்பம்.. உள்ளே அத்தனை பேரும் உற்சாகமாக உள்ளனராம்!
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்று வந்த தலைவர்கள் பலரும் உள்ளே அனைவரும் வழக்கமான உற்சாகத்துடன்தான் உள்ளனர் என்று கூறி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி அதிமுகவினர் தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பல்லோ வாசலில் தினசரி குழுமி காத்துக் கிடக்கின்றனர்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் முதல்வர் உடல் நலம் குறித்து அறிய அப்பல்லோவுக்கு போய் வந்தவண்ணம் உள்ளனர். அனைவரும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அப்பல்லோவுக்குள் உண்மையிலேயே என்ன நிலை காணப்படுகிறது என்று சில தலைவர்களிடம் கேட்டபோது நமக்குத் தெரிய வந்தது...
உற்சாகம் நிலவுகிறது
அப்பல்லோ மருத்துவமனைக்குள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என அனைவருமே உற்சாகத்துடன்தான் உள்ளனர். யாரிடமும் எந்த சோகமும் இல்லை.
இயல்பாக உள்ளனர்
அமைச்சர்கள் உள்பட அனைவருமே இயல்பாகவே உள்ளனர். எந்தப் பதட்டமும், பரபரப்பும் அவர்களிடம் இல்லை. வெளியில் உள்ள நிலைமைக்கு நேர் மாறாகத்தான் உள்ளே நிலவரம் உள்ளது.
சசிகலா மட்டும் முதல்வருடன் இருக்கிறார்
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அறையில் சசிகலா மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இல்லாத சமயங்களில் இளவரசி இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் தேறி வருகிறார்
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் வேகமாக தேறி வருவதாக டாக்டர்கள் கூறுவதாக அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் கூறுகின்றனர். அவர்களின் முக பாவனை, பேச்சுக்களை வைத்துப் பார்க்கும்போது முதல்வர் நலமாக இருப்பதாகவே தெரிகிறது.
கவலைப்பட எதுவும் இல்லை என்றே தெரிகிறது
மொத்தத்தில் முதல்வர் உடல் நலம் குறித்துக் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. வெளியில் உள்ளவர்களை விட உள்ளே இருப்பவர்கள் வழக்கம் போல இருக்கிறார்கள், உற்சாகமாகவே இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.