சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர்
15 Aug,2016
சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபரை பொலீசார் தேடி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்தனர். ரெயில் புச்ஸ்- சென்வால்ட் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது, அதில் பயணம் செய்த 27 வயது வாலிபர் திடீரென தான் வைத்திருந்த திரவத்தை ரெயில் பெட்டியில் கொட்டி கவிழ்த்தார். உடனே அதில் இருந்து கரும்புகையுடன் தீ வெளியாகி ரெயில் பெட்டியில் பரவியது. இதனால் பயணிகள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். அதை ரசித்த வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால் பயணிகளை சரமாரியாக குத்தினான்.
இச்சம்பவத்தில் 6 வயது குழந்தை உட்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர். தீக்காயம் மற்றும் கத்திக்குத்து காயம்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.