மண்ணில் அடக்கம் செய்யப்பட்ட 8 வாரக்குழந்தை.... 8 நாட்கள் பின்பு உயிர் பிழைத்த அதிசயம்!...
02 Sep,2016
மண்ணில் அடக்கம் செய்யப்பட்ட 8 வாரக்குழந்தை.... 8 நாட்கள் பின்பு உயிர் பிழைத்த அதிசயம்!...
தெற்கு சீனாவில் புதர்நிலம் உள்ள மயானத்தில் பிறந்து 8 வாரம் ஆனக்குழந்தை அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
‘லு பெங்க்சியன்’ என்னும் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன் மலைப்பகுதியில் மூலிகைகள் சேகரிக்க புதர்நிலம் உள்ள மயானத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு குழந்தை ஒன்று புதைக்கப்பட்டுருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்த்த போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது . இது குறித்து அந்நாட்டின் பொலிஸார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.