காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்களே!குருப்பெயர்ச்சி பரிகாரங்களுடன்(2.8.16 - 1.9.17

06 Aug,2016
 


காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்களே!

இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும். 

பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வழக்கு சாதகமாகும்.

குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அதிக சம்பளத்துடன் அயல்நாடு தொடர்பு டைய நிறுவனத்தில் வேலை அமையும். 

குரு பகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால், பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாற்று மொழியினரால் நன்மை உண்டு.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைச்சுமை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

2.8.16 முதல் 19.9.16 வரை உங்கள் ராசியாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க கெடுபிடிகள் விலகும். வீடு- மனை வாங்குவீர்கள். நோய் விலகும். 

20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் விரய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், தூக்கம் கெடும். வீண் சந்தேகம் வேண்டாம். செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.

25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். இளைய சகோதர வகையில் மனவருத்தம் வரும். வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், அநாவசியமாக எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். விமர்சனங் களைக் கண்டு அஞ்ச வேண்டாம். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பாக்கிகள் வசூலாகும். சந்தை நிலவரத்தை துல்லியமாக அறிந்து செயல் படுவீர்கள். மக்களின் ரசனைக்கேற்ப புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். துரித உணவகம், ஆட்டோமொபைல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உங்கள் கடின உழைப் புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரி கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்புப் பொறுப்பு களை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பளம் உயரும்.

மாணவ-மாணவிகளே! சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.  

கலைத் துறையினருக்கு பெரிய வாய்ப்பு கள் வரும். பிரபல கலைஞர்களால் பாராட் டப்படுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, ஒடுங்கியிருந்த உங்களை ஓங்கி வளர வைப்பதுடன், ஒரு சாதனையாளராக மாற்றிக் காட்டுவதாகவும் அமையும்.


பரிகாரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருளும் ஸ்ரீசினேகவல்லி உடனுறை ஸ்ரீஆதிரத்தினேஸ்வரரை உத்திராடம் நட்சத்திரம் அல்லது ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வில்வ தளத்தால் அர்ச்சித்து வணங்கி வாருங்கள். கனவு நனவாகும்.


கலாரசனை உள்ளவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புக்கள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யவேண்டி இருக்கும். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால். தெளிவாக முடிவு எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

குரு பகவான் 7-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. வழக்குகளில் இருந்த நெருக்கடி நீங்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டைப் பார்ப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் நல்லபடி முடியும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். உத்திர நட்சத்திரத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு உடல் உஷ்ணம், தோலில் நமைச்சல், முன்கோபம் வந்து செல்லும்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், நினைத்த காரியங்கள் நல்லபடி முடியும். திடீர் பணவரவுக்கு இடமுண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். அஸ்தம் நட்சத்திர அன்பர்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்து போகும். அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம்.

உங்கள் ராசிக்கு 3-க்கும் 8-க்கும் உடைய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பசியின்மை, வயிற்று வலி வந்து போகும். சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியான 2-ம் வீட்டில் குரு அமர்வதால், ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பதிப்பகம், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்பம் பார்த்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துக் களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. நீங்கள் செய்து முடித்த வேலைக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும், இடமாற்றங்களையும் சந்திக்க வேண்டி வரும்.   
               
மாணவ-மாணவிகளே! படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டியது அவசியம். உங்களுடைய தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்பு களை ரகசியமாக வைத்திருங்கள். சிலர் உங் கள் மீது வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் உடலையும் மனதையும் உரப் படுத்துவதுடன், தன் கையே தனக்கு உதவி என்பதை உணரவைப்பதாக அமையும்.


பரிகாரம்:

தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஏலவார்குழலி சமேத ஸ்ரீஆபத்சகாயேஸ் வரரையும், குருபகவானையும் பௌர்ணமி திதி நாளில் பஞ்சாமிர்தம் தந்து வணங்கி வாருங்கள்.



நடுநிலைமை தவறாதவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துகொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றிய துடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.

மனக் குழப்பம் அதிகரிக்கும். பழைய கடன்களை நினைத்துக் கலக்கம் உண் டாகும். வருமானத்தை உயர்த்த கூடுதலாக உழைப்பீர்கள். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வேறு ஊருக்கு இடம் மாறுவீர்கள்.

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்ப தால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலை கிடைக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களிடம் உண்மையான அன்பும் அக்கறையும் உள்ளவர்களைப் புரிந்து கொள்வீர்கள். வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்களின் ஜீவனாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். மகளுக்கு திருமணம் முடியும்.

உங்கள் தனாதிபதியும் சப்தமாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், வருமானம் உயரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக் குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால், காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். வேலைச் சுமையால் அசதி உண்டாகும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்பீர்கள். வங்கிக் கடன் பெற்று சிலர் புது முதலீடு செய்வீர்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். எனினும், எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க அரும்பாடு படவேண்டும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சிலருக்கு பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனம் தளராமல் செயல்படுங்கள்; சாதிக்கலாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங் களுக்கு புதிய படிப்பினைகளைத் தருவதுடன்,  வாழ்க்கையை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தருவதாகவும் அமையும்.


பரிகாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிநாத நாயகி உடனுறை ஸ்ரீஆதிநாதப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.


கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். புகழும் செல்வாக்கும் கூடும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால், உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்தி லிருந்து வாழ்க்கைத் துணை அமைவார். வழக்கில் வெற்றி கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவீர்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் பாக்கியாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும்.  நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள்.

உங்கள் ராசியாதிபதியும்-சஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், எதிர்ப்புகள் குறையும்.புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் ஒரு பகுதி தீரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால், எதிர்பாராத பயணங்கள் உண்டு. வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், மனக்குழப்பங் களும், தடுமாற்றங்களும் இருந்து கொண்டே யிருக்கும். ஆனால், பண வரவு குறையாது. 

வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். துரித உணவகம், இரும்பு, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்களால் லாபம் பெருகும். கடையை பிரபலமான இடத்துக்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. தலைமைப் பொறுப்பு தேடி வரும். 

மாணவ-மாணவிகளே! உங்களுடைய தனித் திறமைகளை அதிகரித்துக் கொள்வீர் கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். 

கலைத்துறையினரே! விருதுகள் கிடைக்கும். உங்களின் கற்பனைத் திறன் பெருகும். சக கலைஞர்களை மதிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி,  உங்களை தலை நிமிரச் செய்வதுடன், வசதி, வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.


பரிகாரம்:

மகாபலிபுரத்துக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானையும் சிதம்பர சக்கரத்தையும் ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமை அல்லது சஷ்டி திதி நாளில் சென்று தரிசியுங்கள். செல்வம் பெருகும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies