நான் நிறைய பேச வேண்டியுள்ளது: ராம்குமார் குமுறல்,சுவாதியை கொலை செய்யவில்லை என ராம்குமார் கூறவில்லை
07 Jul,2016
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லையை சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து பேசினார். பின்னர் இது குறித்து பேசிய அவர் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை கூறியுள்ளார்.
நிதானமாக பேசிய ராம்குமார், மிகுந்த பதற்றத்தில் உள்ளார். ராம்குமாரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காவல்துறை கடுமையாக சித்ரவதை செய்திருக்கிறது. மேலும் காவல்துறை தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்திருக்கிறார்கள் என கூறி ராமராஜனும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், நான் நிறைய பேச வேண்டியிருக்கிறது சார். ஒரு வருடத்திற்கு முன்பே சுவாதியை எனக்குத் தெரியும். ஃபேஸ்புக் மூலமாகத்தான் இருவரும் பேசி வந்தோம். சேட்டிங்கில் நிறைய பேசுவார். பொறியியல் படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை.
சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன். சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது என ராம்குமார் பேசியதாக ராமராஜ் கூறினார்.
இந்த கொலைக்கு வேறு சிலரின் தூண்டுதல் இருப்பதாக சந்தேகிப்பதாக கூறிய ராமராஜ் இது விசாரணையின் போது தெரிய வரும் என்றார்.
சுவாதியை கொலை செய்யவில்லை என ராம்குமார் கூறவில்லை: வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினார் அவருக்கு ஜாமீன் தாக்கல் செய்த வழக்கறிஞர்.
இந்நிலையில் சுவாதியை நான் கொலை செய்யவில்லை என ராம்குமார் கூறவில்லை என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவாதியை நான் கொலை செய்யவில்லை, வேறு யாரையோ காப்பாற்ற என்னை கைது செய்துள்ளனர். காவல் துறையினர் கைது செய்ய வந்த போது நான் கழுத்தை அறுக்கவில்லை. காவல் துறையுடன் வந்த நபர் தான் கழுத்தை அறுத்தார் என ஜாமீன் மனுவில் ராம்குமார் கூறியதாக இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தினார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி.
இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, அதில் ராம்குமாரின் கையொப்பம் இல்லாமல் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மயக்க நிலையில் இருந்த போது, வக்காளத்து வாங்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஜாமீன் மனுவில் ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் மகேந்திரன் ஆகியோர் விலகியுள்ளனர். தங்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதால் இதில் இருந்து விலகுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதன்மூலம் வக்காளத்து வாங்காமல், வழக்கறிஞர் தன்னுடைய கருத்தை ராம்குமாரின் கருத்தாக அவரின் அனுமதி இல்லாமல் கூறியுள்ளது தெரியவந்துள்ளது. ராம்குமார் சுவாதியை கொலை செய்யவில்லை என கூறியது உண்மையில்லை எனவும், இது வழக்கறிஞரால் புணைக்கப்பட்டது என்பது தெரியவந்து இதில் நீடித்து வந்த குழப்பம் விலகியது.
வழக்கறிஞர் இப்படி பொறுப்பில்லாமல் தன்னுடைய கருத்தை குற்றம் சுமத்தப்பட்டவரின் கருத்தாக கூறி நீதிமன்ற நேரத்தை வீணடித்தும், காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்திருப்பதும் கண்டனத்துக்குறியது என பொதுமக்கள் பேசி வருகின்றனர். தேவையில்லாமல் இந்த வழக்கில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்த வழக்கறிஞர் மீது வழக்கு பாயுமா?