ஏழரைச் சனி நடக்கும்போது வீடு கட்டலாமா?...
19 Mar,2016
ஏழரைச் சனி நடக்கும்போது வீடு கட்டலாமா?...
ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் தாராளமாக வீடு- மனை வாங்கலாம். இரண்டாவது சுற்றுச் சனியை 'பொங்கு சனி’ என்பார்கள். ஜாதகரது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் இவரது வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் இந்த பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வீடு- மனை வாங்கலாம். என்ன... சில நேரங்களில் மட்டும் நம் கண்களை மறைப்பார் சனிபகவான். அதனால் பிளாட் அப்ரூவல், வில்லங்க சர்ட்டிஃபிகேட் போன்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏழரைச்சனி நடைபெறும் ஒருவர் போன ஜென்மத்தில் யாரையாவது ஏமாற்றி இருந்தால், இப்போதுஅ வீடு அல்லது மனை வாங்கும்போது வர் ஏமாற வாய்ப்புகள் உண்டு. அதனால் முன் பணம் கொடுக்கும்போதும், பத்திரப்பதிவு செய்யும்போதும் வாரிசு தாரர்கள் எல்லாரும் கையெழுத்துப் போட்டுவிட்டார்களா என்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொள்வது அவசியம். உதாரணத்துக்கு, முதல் தாரத்தின் பையன் கையெழுத்துப் போட்டு விட்டான்; இரண்டாவது தாரத்தின் பையன் அயல்நாட்டில் இருக்கிறான் என்பதை மறைத்துவிட்டார்கள். வீடு வாங்கி இரண்டு வருடங்கள் கழித்து அவன் வந்து, 'எனக்குப் பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் வீட்டில் இருக்க விடுவேன்; இல்லையென்றால் வழக்கு தொடருவேன்’ என்று தகராறு செய்யக்கூடும். இதுபோன்ற பிரச்னைகள் ஏழரைச்சனி காலத்தில் நடக்கும். இதையெல்லாம் சட்ட ரீதியாகத் தெளிவுபடுத்திக் கொண்டு வாங்கினால், எந்தப் பிரச்னையும் இல்லை.