இரண்டரைக்கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் பெண்ணொருவர் கைது
21 Nov,2015
இரண்டரைக்கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் பெண்ணொருவர் கைது
வெளிநாட்டுப் பணத்தை சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 12.45 அளவில் பெங்கொக் நோக்கி செல்லவிருந்த டி.ஜீ.308 இலக்க விமானத்தில் வைத்தே குறித்த பெண்ணை கைது செய்ததாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணிடம் ஸ்ரேலிங் பவுண், அமெரிக்க டொலர், சுவிஸ் பிரேங் யுரோ மற்றும் சவுதி ரியால்கள் உட்பட பெறுமதியான பணம் காணப்பட்டதாகவும் இதன் பெறுமதி ரூபாய் 57,645 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 50 வயதான கடுவலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.