பரடேசியா நகரில் நடைபெற்ற சைவ பண்பாட்டுத் திருவிழா .
03 Nov,2015
கடந்த 24.10.2015 சனிக்கிழமை பரடேசியா நகர மண்டபத்தில் டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 8வது ஆண்டுநிறைவும் அச்சபை வருடாவருடம் நடாத்தும் பண்ணிசை, பேச்சு, பொதுஅறிவுப் போட்டிகளுக்கான
பரிசளிப்புமான நகழ்வுகளை முன்னிட்டு நடாததப்படும் நிகழ்வு இவ்வாண்டு பரடேசியா நகரில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வு அன்று பிற்பகல் 3மணக்கு ஆரம்பமான நிழ்வில். வரவேற்புத்தீபத்தை திரு கிருபாகரன் புஸ்பா, திரு.மோகன் கௌசலா தம்பதியர் இணைந்து தீபம் ஏற்ற
மங்கள இசையுடன் ஆரம்பமான விழா தொடர்ந்து டென்மார்க் சிவாச்சாரியர்கள்
மங்கள தீபம்களை ஏற்றிவைக்க. ஏறுதுபார் எங்கள் சைவக்கொடி. ஈசனின் நாமத்தைக் சொல்லும் கொடி.
அசையுதுபார் எங்கள் நந்திக்கொடி. என்ற கொடியேற்றப் பாடல் ஒலிக்க நந்திக் கொடியை ஏற்றிவைத்தார் பொன்னண்ணா. திருமுறையை மேடையில் செல்வி மேகவி .பத்மசேகரன் ஓத விழா ஆரம்பமானது.
விழாவில் முதலாவதாக பேரவையின் செயலாளர் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்க. அவரைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் தலைமையுரை ஆற்ற
ஜேர்மனி அனுஷந் நயினை விஜயன் அவர்களின் கர்ணாடிக் சாசிகா இரசக்குழு இசைக் கலைஞர்கள் இசை வழங்க டென்மார்கின் பிரபல பாடகர்கள் பாடகிகள் தம்குரல் வழத்தால் தன்மைகளை வெளிப்படுத்த சபையில் பலத்த கரகோசங்கள் மக்கள் ரசித்தனர்.
அடுத்து திருவாளர் ப. தட்சணா மூர்த்தி அவர்களின் உமாபதி கண்ட சைவ சித்தந்;தம் என்ற பொருளில் பேச்சுமம். மற்றும் சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரி மாணவிசெல்விகள் மாதுரிகா தேவபாலன் தேனுகா தேவபாலன் அகியோரின் வீணையிசையும்.செல்வி சாயிசிந்து அவர்களின் இன்னிசைக் கச்சேரியும் தொடர.
திருமதி மகாலட்சுமி சத்தியமூர்த்தி அவர்களின் கீதாலயா நடக்கல்லூரி மாணவி; நடனக்கல்லூரி ஆசிரியை திருமதி கிஸ்ணபிரியா கோபிநேசன் அவர்களின் மணவிகளின் நடனநிகழ்சியும். கோணேஸ்வரா நடனக் கல்லூரி ஆசிரியை திருமதி கௌரிவசந்தி தயாராஜன் அவர்களின் மாணவிகளின் நடனநிகழ்வுகளும்.
கலாகேத்திரா நுண்கலைக் கல்லூரி ஆசிரியை வித்தியாபூஷண்
துவாரகா சுகேந்திரா செந்தூரன் அவர்களி மாணவர்களின் கானங்களிசைக்க
வேலணையூர் பொன்னண்ணா நம்பிக்கை என்றதலைப்பில் உரையாற்ற சபையில் கருகோசம் வானைமுட்ட கிறின்ரட் சைவநெறிக்கூட மாணவர்களின் பட்டிமன்றம்
தொடர்ந்தது.
மேலும் ஜெயகுமார் பேரின்பம் கூட்டு நிகழ்வாக காட்சியும்கானமும் மேடையை கலக்க ஜேர்மனி இளம்குயில் இசைமழையில் தெய்வீக கானங்கள் மழையாய் இசைபொழிந்தது
ஓகூஸ்நடன ஆசிரியர் நாட்டிய கலாஜேர்தி நிரேகா யோகேந்திரனின் மணவர்கள் கண்ணனுடன் வானத்தில் ஒருநாள் என்ற நடனநிகழ்ச்சி நடைபெற.
மிடில்பாட் சைவநெறிககூட ஆசிரியை கௌசலா மோகனின் மாணவ மணவிகளின் காவடி நடனம் தொடர. இரவு பன்னிரட்டைத்தாண்டியும்; மண்டபம் நிறைந்த மக்களோடு தொடர்த நிகழ்வில் பண்ணிசைப் போட்டி பேச்சுப்போட்டி சைவநெறி பொது அறிவுபோட்டி களில் பற்கேற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்க முதல் பரிசாக தங்கப்பரிசை வாழங்க சயைல் கரகோசம் முழங்க.மக்களின் மகிழ்வான நிறைவான பொழுதாக அன்றைய பொழுது சைவத்தை டென்மார்கில் மணக்க வைத்தது எனலாம் ஓளியமைப்பை பீல்லூண் தவச்செல்வன் அமைக்க.
நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு கண்டது