உள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறி­யா­மலே கண்க­ளி­லி­ருந்து கண்­ணீரை

04 Oct,2015
 

கதவை உடைத்து உள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறி­யா­மலே கண்க­ளி­லி­ருந்து கண்­ணீரை பெருக்­கெ­டுக்கச் செய்­தது. அனை­வ­ருமே  அதிர்ச்­சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள்.”- பத்து வயது பால­கனின் படு­கொலை குறித்து சந்­தேக நபர் ஒப்­புதல் வாக்­கு­மூலம்

“அன்று 25 ஆம் திகதி ரவிந்து பாட­சா­லைக்கு செல்­ல­வில்லை. ” அம்மா, அப்பா இன்­றைக்கு எங்கள் வகுப்பு ஆசிரியர் வர மாட்டார். பாட­சா­லைக்குச் சென்­றாலும் பாடங்கள் படிப்­பிக்க மாட்­டாங்க.

நான் இன்­றைக்கு வீட்டில் இருக்­கின்றேன் ” என்று தனது பெற்­றோ­ருக்கு எடுத்துக் கூறி அன்­றைய தினம் வீட்­டி­லி­ருப்­ப­தற்­கான அனு­ம­தியைப் பெற்றான் ரவிந்து.

பெற்­றோரும் தமது செல்ல மகனின் விருப்­பத்­துக்கு குறுக்­காக இருக்­க­வில்லை. “ சரி, சரி மகன் குழப்­படி பண்­ணாமல் இருக்­கனும்” என்று ரவிந்­துவின் தாய் அறி­வுரை வழங்­கினாள்.

எனவே அன்று ரவிந்­துவின் மகி­ழ்ச்­சிக்கு அளவே இருக்­க­வில்லை. துள்ளிக் குதித்து சென்று காலை வேளையிலேயே தொலைக்­காட்சிப் பெட்­டியை இயங்கச் செய்து கார்ட்டூன் நிகழ்ச்­சி­களைப் பார்க்க ஆரம்பித்தான்.

இத­னி­டையே ரவிந்­துவின் அக்கா தனது தொழி­லுக்­காக வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டுச் சென்றாள். இத­னை­ய­டுத்து ரவிந்­துவின் மூத்த சகோ­தரன் சுக­வீ­ன­முற்று இருப்­பதால், தாயும் மூத்த சகோ­த­ரனும் வைத்­தி­ய­சா­லையை நோக்கி புறப்­பட்டுச் சென்­றார்கள்.

எனவே, ரவிந்­துவும் அவ­னது தந்­தை­யுமே அன்று வீட்டில் இருந்­தார்கள். தந்­தையும் சிறிது நேரத்தில் “மகன் நான் இன்னும் கோழி­க­ளுக்குத் தீனி வைக்­க­வில்லை வைத்­து­விட்டு வரு­கின்றேன்.

நீங்கள் எங்­கேயும் போகாமல் வீட்டில் இருங்கள் நான் வரு­கின்றேன். ” என்று கூறி வீட்­டி­லி­ருந்து சற்று தொலை­வி­லி­ருந்த கோழிப் பண்­ணையை நோக்கிச் சென்றார்.

எனினும், அதன்பின் சிறிது நேரத்தில் கோழிப் பண்­ணையில் தனது வேலை­களை முடித்­து­விட்டு தந்தை வீட்டுக்கு வந்த போது தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்த ரவிந்­துவைக் காண­வில்லை.

ளசைரஎயn தந்தையை பழிவாங்கவே தனயைனை கொன்றேன்!!: பத்து வயது பால­கனின் படு­கொலை செய்த நபர் ஒப்­புதல் வாக்­கு­மூலம் ளசைரஎயn1“ மகன்… மகன்.. ரவிந்து எங்கே இருக்­கின்றாய் ? ” என்று பெயர் சொல்லி அழைத்­த­வாறு வீட்டின் மூலை முடுக்­கெல்லாம் தேட ஆரம்­பித்தார். எனினும், எங்கு தேடியும் ரவிந்து இருக்­க­வில்லை.

இதனால் குழப்­ப­ம­டைந்த தந்தை வீட்டின் சுற்­றுப்­புற பிர­தே­சத்தில் மகனைத் தேட விழைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்து பலத்த குரலில் “ரவிந்து, ரவிந்து” என்று பெயர் சொல்லி அழைத்­த­வாறே தேடிச் சென்றார்.

இதன்­போது சத்தம் கேட்டு அய­ல­வர்கள் பலரும் ரவிந்­துவின் தந்­தை­யுடன் கைகோர்த்­தனர். இருப்­பினும், ரவிந்து தொடர்­பாக எந்­த­வித தக­வல்­களும் கிடைக்­க­வில்லை.

அதனைத் தொடர்ந்து அய­ல­வர்­களில் ஒருவர் ” உங்­க­ளு­டைய மகன் அடிக்­கடி பெரே­ராவின் வீட்­டுக்கு போய் வருவான் தானே. அங்கு ஏதும் சென்­றானோ தெரி­ய­வில்லை. வாருங்கள் அங்கு சென்று பார்ப்போம்” என்று கூறினார்.

பெரேரா ரவிந்­துவின் சித்­தப்­பாவின் கல் குவா­ரியில் வேலை செய்யும் தொழி­லாளி. எனவே ரவிந்­துவின் சித்தப்பா அவன் தங்­கு­வ­தற்­கென்று ஓர் அறை­யுடன் கூடிய சிறிய வீட்­டையும் ஒதுக்கிக் கொடுத்­தி­ருந்தார்.

எனவே, ரவிந்­துவும் அடிக்­கடி அங்கு சென்று விளை­யா­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­ததால் தான் அவன் அங்கு சென்­றி­ருப்­பானோ என்ற சந்­தேகம் அவர்­க­ளுக்குள் எழுந்­தது ஆகவே ரவிந்­துவின் வீட்­டி­லி­ருந்து 100 மீற்றர் தூரத்­தி­லி­ருந்த பெரே­ராவின் தங்­கு­மி­டத்தை நோக்கிப் படை­யெ­டுத்­தார்கள்.

அவர்கள் அங்கு செல்லும் போது அந்த சிறிய வீட்டின் முன் கதவு உட்­பு­ற­மாக தாழி­டப்­பட்­டி­ருந்­த­துடன், கண்ணுக்­கெட்­டிய தூரம் வரை அதன் சுற்­றுப்­பி­ர­தே­சத்தில் சன­ந­ட­மாட்டம் இருக்­க­வில்லை.

இத­னைத்­தொ­டர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்­களை அறி­யா­மலே கண்­க­ளி­லி­ருந்து கண்­ணீரை பெருக்­கெ­டுக்கச் செய்­தது.

அனை­வ­ருமே அதிர்ச்­சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள். அந்த சிறிய பாலகன் ரவிந்து கை, கால்கள் துண்­டிக்­கப்­பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்­க­ளுடன் குருதி வௌ்ளத்தில் சட­லமாய்க் கிடந்தான்.

எனவே, இது தொடர்­பாக 119 என்ற அவ­சர தொலை­பேசி இலக்­கத்தின் ஊடா­கவே அத்து­ரு­கி­ரிய பொலிஸ் நிலை­யத்­துக்கு தகவல் கிடைக்­கப்­பெற்­றது.

அத்துரு­கி­ரிய கப்­பு­று­கொட பகு­தியில் 10 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்­யப்­பட்டு கிடக்­கின்றான். என்­ற­வாறே அந்த தகவல் இருந்­தது.

இதனைத் தொடர்ந்து அத்து­ரு­கி­ரிய பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரி­வினர் குறித்த பிர­தே­சத்தை நோக்கிச் சென்­றனர். பொலிஸார் அங்கு செல்லும் போது சிறு­வனின் சட­லத்தை சுற்றி அய­ல­வர்கள் குழு­மி­யி­ருந்­த­துடன், அந்த சிறிய வீட்டில் தங்­கி­யி­ருந்த பெரே­ராவும் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தான்.

இதன்­போது, இது தொடர்­பாக ரவிந்­துவின் தந்­தை­யிடம் பொலிஸார் வாக்­கு­மூ­ல­மொன்­றையும் பதிவு செய்­தனர்.

“சேர்! பெரேரா எனது தம்­பியின் கல் குவா­ரியில் சுமார் ஒரு வரு­டத்­துக்கு முதல் வேலைக்கு சேர்ந்தான். அவனை நாங்கள் இங்கு வேலைக்கு சேர்ப்­ப­தற்கு முன்னர் அறிந்­தி­ருக்­க­வில்லை.

அது­மட்­டு­மின்றி அவன் இங்கு வேலைக்கு வந்த போது கூட தம்பி அவன் தொடர்­பாக எது­வுமே விசாரித்துப் பார்க்­க­வில்லை. குறைந்­தது அவ­னி­ட­மி­ருந்து தேசிய அடை­யாள அட்­டையைக் கூடப் பெற்றுக்கொள்ளவில்லை.

அதற்கு காரணம் கல் உடைப்­பதில் பெரேரா திற­மை­சா­லி­யா­க­வி­ருந்தான். தம்பி அவன் தங்­கு­வ­தற்கு வீடொன்­றையும் கொடுத்தான். அதற்கு வாட­கை­யென்று எது­வுமே அவ­னி­டத்தில் அற­வி­ட­வு­மில்லை.

பெரேரா எனது இளைய மகன் ரவிந்­து­வுடன் மிக நெருக்­க­மாகப் பழ­குவான். ரவிந்­துவும் எவ்­வ­ளவு சொன்­னாலும் கேட்க மாட்டான். மாமா மாமா…. என்று இங்­கேயே ஓடி வந்து விடுவான்.

அதனால் வந்த விளைவு தான் சேர் இது. என்று கண்­ணீ­ருடன் ரவிந்­துவின் தந்தை தனது வாக்­கு­மூ­லத்தில் தெரிவித்தார். எனவே, ரவிந்­துவின் கொலை, பெரேரா தலை­ம­றை­வா­கி­யுள்­ளமை என்­பன பொலி­ஸா­ருக்கு பெரேரா தான் இந்த கொலையைப் புரிந்­தி­ருக்க வேண்டும் என்ற சந்­தே­கத்தை உண்டு பண்­ணி­யது.

அதன்­படி முதலில் அவன் பணி­பு­ரிந்த கல் குவா­ரிக்கு சென்­றனர். எனினும் அவன் அங்கு இருக்­க­வில்லை. இதனை­ய­டுத்து பெரே­ராவை கண்­டு­பி­டிப்­ப­தற்கு பொலிஸ் மோப்ப நாய்­களின் உத­வியும் பெறப்­பட்­டது.

அதன்­பின்னர் அவன் தொடர்­பாக கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் ஒரு மாதிரி உரு­வப்­ப­டத்­தையும் பொலிஸார் பெற்­றுக்­கொண்­டனர்.

அவ்­வாறு பெற்றுக் கொண்­டதின் மூலம் அவன் நவ­க­முவ பொலிஸ் நிலை­யத்தில் சமூக விரோத குற்றச்செயல்­களின் ஈடு­படும் பிர­தான குற்­ற­வா­ளிகள் பட்­டி­யலில் பதிவு செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒருவன் என்பது தெரி­ய­வந்­தது.

அது­மட்­டு­மின்றி, பெரேரா 20 வரு­டங்­க­ளுக்கு முன் 23 வய­து­டைய இளைஞன் ஒரு­வனின் கை, கால்­களைத் துண்­டித்து படு­கொலை செய்­தமை தொடர்பில் 4 வரு­டங்கள் சிறை­வாசம் அனு­ப­வித்து பிணையில் வெளியில் வந்­தவன் என்­பதும் தெரி­ய­வந்­தது.

எனவே, இச்­சி­று­வனின் கொலை­யுடன் நேர­டி­யாக பெரே­ரா­வுக்கு தொடர்­பி­ருக்க வேண்டும் என்று பொலிஸார் உறு­தி­யாக நம்­பி­னார்கள்.

இத­னை­ய­டுத்து இர­க­சிய தொலை­பேசி இலக்­க­மொன்றின் ஊடாக பெரேரா பிய­கம பிர­தே­சத்தில் இருக்­கின்றான் என்று தக­வ­ல் கிடைக்­கப்­பெற்­றதைத் தொடர்ந்தே சம்­பவம் நடை­பெற்ற தினத்­துக்கு மறுநாள் காலை பிய­கம பிர­தே­சத்தில் வைத்து பெரே­ராவை பொலிஸார் கைது செய்­தனர்.

அதன்பின் சந்­தேக நப­ரான பெரே­ரா­விடம் பொலிஸார் மேற்­கொண்ட தொடர்ச்­சி­யான விசா­ர­ணை­களில் மூலம் அவனை பற்­றிய பல விட­யங்கள் வெளி­வர ஆரம்­பித்­தன.

கொத்த­ல­ாவல பிர­தே­சத்தைச் சேர்ந்த 54 வய­தான பெரேரா பல வரு­டங்­க­ளுக்கு முன் கல் குவா­ரியில் தொழிலில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் போது ஏற்­பட்ட விபத்தில் அவ­னது பாலியல் உறுப்பு கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்டு சிகிச்­சை­களை பெற்றும் வந்­தி­ருக்­கின்றான்.


 தந்தையை பழிவாங்கவே தனயைனை கொன்றேன்!!: பத்து வயது பால­கனின் படு­கொலை செய்த நபர் ஒப்­புதல் வாக்­கு­மூலம் உhடைன அரசனநச உயளநள 1இதனால் பெரே­ரா­வுக்கு திரு­மணம் என்­பது வெறும் கன­வா­கவே போய்­விட்­டது. இக்­காலப் பகு­தியில் தான் 23 வய­தான இளைஞன் ஒரு­வனைப் படு­கொலை செய்த குற்­றத்­துக்­காக 4 வரு­டங்கள் சிறை வாசம் அனு­ப­வித்து பிணையில் வெளியில் வந்­தி­ருக்­கின்றான்.

இதனால் குடும்ப உறுப்­பி­னர்­களும் பெரே­ராவை குடும்­பத்தை விட்டு ஒதுக்­கியே வைத்­துள்­ளனர். இந்­நி­லையில் தான் ரவிந்­துவின் சித்­தப்­பாவின் கல் குவா­ரிக்கு வேலைக்கு வந்­துள்ளான்.

அங்கு கைநி­றைய சம்­பளம், தங்­கு­வ­தற்­கான இடம் என்று எந்தக் குறையும் பெரே­ரா­வுக்கு இருக்­க­வில்லை. மிகவும் சுமுக­மான முறை­யி­லேயே பெரேரா வேலை­களை செய்து வந்­துள்ளான்.

அதுவும் பெரே­ரா­வுக்கும் சிறுவன் ரவிந்­து­வுக்கும் இடையில் மிகவும் நெருக்­க­மான ஒரு உறவு காணப்­பட்­டது. ரவிந்­து­வுக்கு இனிப்பு பண்­டங்­களை வாங்­கு­வ­தற்கு பணம் கொடுப்­பது, சாப்­பாடு வாங்­கிக்­கொ­டுப்­பது என்று ரவிந்து மீது பெரேரா பிரி­ய­மு­டனே இருந்தான்.

எனினும், இவை­யெல்­லாமே ரவிந்­துவின் தந்­தையின் மீது இருந்து வந்த விரோ­தத்­தினால் மாற ஆரம்­பித்­தது.


இது தொடர்­பாக பெரேரா தனது குற்­றத்தை ஒப்­புக்­கொண்டு தெரி­வித்த வாக்­கு­மூ­லத்தில்

“இந்தச் சிறுவன் ரவிந்­துவை எனக்கு மிகவும் பிடிக்கும். எனினும், எனக்கு அவ­னு­டைய அப்­பாவைப் பிடிக்கவில்லை.

அதற்குக் காரணம் ரவிந்­துவின் அப்பா எப்­ப­டி­யா­வது நான் தங்­கி­யி­ருந்த வீட்­டி­லி­ருந்து என்னைத் துரத்த வேண்டும் என்­பதில் குறி­யா­க­வி­ருந்தார். ஆகவே அவனை பழி­வாங்க வேண்டும் என்று எண்­ணினேன்.

எனினும், அவனைக் கொலை செய்­வதை விட அவ­னு­டைய செல்ல மகனை கொலை செய்­வதே அவ­னுக்கு அதி­க­ள­வான வேதனை தரும் என்று நான் எண்­ணி­யதால் ரவிந்­துவை கொலை செய்யத் திட்­ட­மிட்டேன்.

அந்த சந்­தர்ப்­பத்­துக்­காக காத்­தி­ருந்தேன். என்­றா­வது அந்தக் குழந்­தையை கண்டம் துண்­ட­மாக வெட்ட வேண்டும் என்­பது மட்­டுமே எனது குறிக்­கோ­ளா­க­வி­ருந்­தது. நாளும் வந்­தது.

அன்று 25 ஆம் திகதி காலை­யி­லேயே சிறுவன் என்னைத் தேடி வந்தான். ‘ மாமா… மாமா.. காசு இருந்தால் தாருங்கள் சொக்லெட் வாங்­குவோம்” என்று கேட்டான்.

அந்த சந்தர்ப்பத்தை நான் சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொண்டேன். அறை­யி­லி­ருக்கும் பையில் பணம் இருக்­கின்­றது போய் எடுத்து வா என்று அறை­யி­னுள்ளே அவனை அனுப்­பினேன்.

அதன்பின் நான் ரவிந்­துவின் பின் னால் சத்­த­மில்­லாமல் அறை­யினுள் சென்று கத்­தியால் தாக்க ஆரம்­பித்தேன். கை, கால் இரண்­டையும் உட­லி­லி­ருந்து வேறாக்­கினேன். தலை­யிலும் பலமாக தாக்­கினேன்.

சிறிது நேரத்தில் அவன் துடி­து­டித்து இறந்து போனான். பின் நான் உட்­பு­ற­மாக கதவை தாழிட்டு துணி­வ­கை­க­ளையும் எடுத்­துக்­கொண்டு பின்­புற வாசல் வழி­யாக வெளியில் வந்தேன்.

பின் நான் வழ­மை­யாக குளிக்கும் இடத்­துக்கு சென்று குளித்து ஆடை­யையும் மாற்­றிக்­கொண்டு, கத்­தி­யையும் நன்­றாக கழுவி எடுத்­துக்­கொண்டு கல் குவா­ரி­யி­லுள்ள கற்­பா­றை­யினுள் கத்­தியை ஒளித்து விட்டு முச்­சக்­கர வண்­டியில் ஏறி அத்து­ரு­கி­ரிய பிர­தான சந்­தியை வந்­த­டைந்தேன்.

முச்­சக்­கர வண்டி சார­திக்கு நான் பணம் கொடுக்­கவும் இல்லை. பிறகு தரு­கின்றேன் என்று வந்­து­விட்டேன். அதற்­கு­பி­றகு 170 இலக்க பஸ்ஸில் ஏறி ராஜ­கி­ரி­ய­வுக்கு வந்தேன்.

அங்கு நான் வழ­மை­யாக குடு புகைக்கும் இடத்­துக்கு சென்று குடு பக்கெட் ஒன்­றினை வாங்கி புகைத்தேன். என்­னு­டைய ஆணு­றுப்பு பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது என்று யாருக்குமே தெரி­யாது.

இருப்­பினும் என்னால் மற்­ற­வர்­களைப் போல் பாலியல் இன்பம் காண முடி­ய­வில்­லையே என்ற வருத்தம் என்­னுள் இருக்­கின்­றது.

கல் குவா­ரியில் பணி­பு­ரியும் ஆண்கள் அவர்­க­ளு­டைய பாலியல் சம்­பந்­த­மான சுவ­ரா­சி­ய­மான அனு­ப­வங்­களை பகிர்ந்­து­கொள்­வார்கள். என்­னையும் சில சம­யங்­களில் கேலி செய்­வார்கள்.

எனக்கு அப்­போதெல்லாம் பெரும் கவ­லை­யா­க­வி­ருக்கும். எனினும், நான் அதை வெளியில் காட்­டிக்­கொள்ள மாட்டேன். என்­னு­டைய குடும்­பத்­த­வர்கள் அனை­வரும் கொத்த­லா­வ­லவில் இருக்­கின்­றார்கள்.

இருப்­பினும், அவர்கள் அனைவருமே என்னை இன்று வெறுக்கின்றார்கள். ஆகவே, தான் ரவிந்துவை கொலை செய்ததன் பின் எங்கு செல்வது என்று தெரியவில்லை.

ஒரு வழியாய் தப்பி பியகமவுக்கு வந்தேன். இதன்போதே பொலிஸாரிடம் கையும் களவுமாக அகப்பட்டேன்.”என்று பெரேரா தனது வாக்குமூலத்தில் தெரிவித்தான்.

அதன்பின் அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் சந்­தேக நப­ரான பெரேரா பயன்­ப­டுத்­திய கத்­தியை மறைத்து வைத்த இடத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக குறித்த கல் குவா­ரிக்கு அழைத்துச் சென்­றனர்.

இதன்­போதே பெரேரா கால் தவறி வீழ்ந்ததில் விபத்­துக்­குள்­ளாகி பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டான். மேலும், நீதி­மன்­றத்தின் உத்­த­ரவின் பேரில் சந்­தேக நபர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளான்.

எனவே, விரோதம், கோபம், அறி­யாமை என்­ப­னவே இத்­த­கைய கோர சம்­ப­வங்­க­ளுக்கு கார­ணங்­க­ளாக அமை­கின்­றன. மேலும், பணி­யி­டங்­களில் தொழி­லா­ளர்­களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்கள் தொடர்­பாக எப்­போதும் எச்­ச­ரிக்­கை­யாக இருப்பதன் மூலம் இத்தகைய கோர சம்பவங்களைத் தவிர்க்கலாம்.

-வசந்தா -



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies