டென்மார்க் நீதிமன்ற ஜுரரர்கள் சபைக்கு யாழ்ப்பாணத் தமிழர் நியமனம்! பாலியல் பலாத்காரம் நஷ்ஈடு பெறுவதில் சிக்கல்

22 Sep,2015
 


டென்மார்க் நீதிமன்ற ஜுரரர்கள் சபைக்கு யாழ்ப்பாணத் தமிழர் நியமனம்! 



 
டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும்.
டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும்.
    

சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத் தூதுக்குழு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இத்தூதுக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.


பாலியல் பலாத்காரம் நஷ்ஈடு பெறுவதில் சிக்கல்



டென்மார்க்கில் வருடந்தோறும் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாவோர் தொகை 3600 என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன, இவர்களில் பலர் உரிய நஷ்டஈட்டை பெற முடியாது சிரமப்படுகிறார்கள்.

டென்மார்க்கில் உள்ள பாலியல் பலாத்கார சட்டங்களின் படி பாதிக்கப்பட்ட ஒருவர் 72 மணித்தியாலங்களின் முன்பதாக போலீசாரிடம் முறைப்பாடு செய்துவிட வேண்டும், அதற்கும் மேல் காலம் தாழ்த்தினால் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து நஷ்டஈடு பெற முடியாது.

பொதுவாக ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் டி.என்.ஏ பரிசோதனை வர மூன்று மாதங்கள் ஆகும்.

இது தவிர மேலும் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் மூன்று நாட்கள் போதியதல்ல என்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோருக்கு உதவுவதற்காக உள்ள எட்டு சென்டர்களும் கூறுகின்றன.

இந்தக் காலத்தை நீட்டிப்பு செய்வதற்காக நஷ்டஈடு வழங்கும் சட்டம் இலக்கம் 11 சரத்து 2 – 1 ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்வோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வீறாப்பு பேசும் நீதியமைச்சர் பாதிக்கப்படுவோர் நஷ்ட ஈடு பெறுவதற்கு உதவியாக சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது பலரது வேண்டுதலாகும்.

போதையில் இருக்கும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா இல்லை இணங்கி உறவு கொண்டாரா என்பதை சரியாக பிரித்தெடுப்பது சில வேளைகளில் பிரச்சனையாக அமைவதுண்டு.

சென்ற வாரம் பாலியல் பலாத்காரம் என்று வழக்கு போட்ட பெண்மணி ஒருவர் பொய் முறைப்பாடு செய்தமை கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஏற்படும் தடுமாற்றங்களை தீர்த்து போலீசாரிடம் வருவது சிரமாக அமையலாம், மேலும் போதை வஸ்த்து பாவனையாளருக்கும் 72 மணித்தியால அவகாசமே இருப்பதும் கவனிக்கத்தக்கது.


 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies