டென்மார்க் வைலை நகருக்கு சற்று தொலைவில் வீதி விபத்துக்குள்ளாகி ஐந்து வயது சிறுமி ஒருத்தி பரிதாப மரணமடைந்துள்ளார்.
வேகமாக வந்த கார் ஒன்றுடன் முன்புறமாக இவருடைய மிதி வண்டி மோதியுள்ளது, அவசரமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
ஐந்து வயது சிறுமி வீதிக்குக் குறுக்காக வந்தபோது மரணமடையும் விபத்து நடக்குமளவுக்கு விபரீதம் நேர காரணம் என்ன..? விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் டென்மார்க்கில் வீதி விபத்து மரணங்கள் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு யூலை மாதத்தில் விபத்தில் மரணித்தோர் தொகை 9 ஆகும் இதே யூலை மாதம் சென்ற ஆண்டு மரணித்தோர் தொகை 21 ஆகும்.
மேலும் இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்து மரணங்களின் தொகை 81 ஆகும், ஆனால் கடந்து போன இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஒரு மாதம் கூட மரணித்தோர் தொகை 15ற்கு கூடவில்லை இது சாதனை இலக்காகும்.
போட்டோ வாகனங்களுக்கு பயந்து மக்கள் கார்களை குறைந்த வேகத்தில் ஓடுவது விபத்துக்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.
மாகிரத அன் கோவை வரவேற்க மறுக்கும் அரசியல்
டென்மார்க் மகாராணி மாகிரதவும், அவருடைய கணவனும் எதிர்வரும் செப் 1ம் திகதி டென்மார்க் சுவ்டுருய்ஸ் நகரத்திற்கு வருகைதரவுள்ளார்கள்.
அரச குடும்பத்தை மரியாதைக்காக பீரங்கி வேட்டுக்களை தீர்த்து வரவேற்க தயாராகிவிட்டது நகரசபை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எட்டு லட்சம் குறோணராகும்.
இந்தப் பணத்தை அரச குடும்பத்தின் ஒரு நாள் பயணத்திற்காக கொட்டி இறைப்பது வீணான செயல் எத்தனையோ நல்ல காரியங்கள் எல்லாம் கிடப்பில் கிடக்கிறது என்று இரண்டு நகரசபை உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒருவர் சோசல்டெமக்கிரட்டி, இன்னொருவர் என் கில்ஸ் லிஸ்ற் கட்சி உறுப்பினராகும்.
தனிப்பட்ட முறையில் நாங்கள் அரச குடும்பத்தின் எதிராளர்கள் அல்ல கௌரவமான முறையில் பங்குபற்ற முடியாதென தெரிவித்துள்ளோம் என்றுள்ளனர்.
மேலும் டென்மார்க் அரசியலில் அரச குடும்பம் என்பது பழமை பேணும் கொள்கைக்கு அமைவாக வைக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பே அல்லாது அவர்களிடம் அதிகாரம் எதுவும் இல்லை என்பது நமக்கும் மற்றவருக்கும் தெரியும்.
உண்மை தெரிந்தும் தெரியாதது போல நடக்க தாம் விரும்பவில்லை என்று கூறி நிகழ்வுக்கு வர மறுத்துள்ளனர்.
டென்மார்க்கில் மட்டுமல்ல பிரிட்டன், கொலன்ட், பெல்ஜியம், சுவீடன் போன்ற நாடுகளில் எல்லாம் அரச குடும்பம் என்பது அதிகாரமற்றதாகவே இருப்பது கவனிக்கத்தக்கது, இவர்கள் கையொப்பமிடாவிட்டாலும் இன்னொரு வாசிப்புடன் ஒரு பிரேரணை சட்டமாகிவிடும்.
சித்திவிநாயகர் ஆலயத்தில் தோத்தோற்சவம் சிறப்பாக நடந்தது..
டென்மார்க் அருள் மிகு சித்திவிநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, வழமைக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர்.
மழை இல்லாமல் வெயில் கை கொடுத்த காரணத்தால் ஜனக்கூட்டம் அலை மோதியது அதிகம்.. கடைத்தொகுதிகளை போட்டோர் நஷ்டமில்லாத வியாபாரம் கண்டுள்ளனர்.
ஆடை அணிகலன்களுடன் போனோர் மகிழ்வு கண்டுள்ளனர்ஸ அனைவருக்கும் அருள்பாலிக்கும் சித்திவிநாயகர் சிறப்பாக வலம்வந்தார்..