பாகிஸ்தானில் தீயணைப்பு படையில் முதல் பெண்
11 Jul,2015
பாகிஸ்தானில் தீயணைப்பு படையில் முதல் பெண்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் வெஹாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாஷியா பர்வீன் (25). இவர் பாகிஸ்தான் தீயணைப்பு படை வீரராக பணியில் சேர்ந்துள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தான் தீயணைப்பு படையில் பணியில் சேர்ந்துள்ள முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது இவர் 1123 என்ற நம்பருடைய பாகிஸ்தானின் அவசர தீயணைப்பு படையில் பணியாற்றுகிறார்.
இதுகுறித்து ஷாஷியா பர்வீன் கூறும் போது, சில பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து பணிபுரிவதை விரும்புவதில்லை. அதனால் இது போன்று வேலை வாய்ப்புகளை தவிர்த்து விடுகின்றனர்.
நான் அவர்களிடம் இருந்து வேறுபட்டு ஆண்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன்.
அதற்காக சவால் நிறைந்த இப்பணியை தேர்ந்தெடுத்தேன். தொடக்கத்தில் நான் ஆண்களுடன் சேர்ந்து தீயணைப்பு பணி மேற்கொண்ட போது என்னைப் பார்த்து பொதுமக்கள் சிரித்தார்கள். அவர்களது உடைமைகள் தீயில் எரியாமல் பாதுகாத்து தந்த போது என்னை மனமாற வாழ்த்தி பாராட்டினார்கள் என்றார்.
தீயணைப்பு படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இவருக்கு லாகூரில் பயிற்சி அளிக்கப்பட்டது. 600 ஆண்களுடன் இணைந்து இவர் பயிற்சி பெற்றார். அவர்களில் இவர் ஒருவர்தான் பெண் ஆவார்.