செல்பி சாவு: கேமராவுக்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண்
22 May,2015
செல்பி சாவு: கேமராவுக்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண்
தன்னைத் தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவற்றை பதிவேற்றம் செய்வது தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த செல்பி மோகம், ரஷ்யாவில் ஒரு இளம்பெண்ணின் உயிர் ஊசலாடக் காரணமாகியுள்ளது.
மெக்சிகோவில் உள்ள அலுவலம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு செல்பி எடுப்பதில் வெறித்தனமான ஆர்வம்.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று அவருக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டுக் கொள்வது போன்ற புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக்கில் போட வேண்டும் என்பதே அந்த ஆசை. தனது விருப்பத்தை நிறைவேற்ற உடனே செயலில் இறங்கினார்.
தனது அலுவலகத்தில் பணிபுரியும் செக்யூரிட்டியின் துப்பாக்கியை திருட்டுத்தனமாக எடுத்தார். அதை தனது தலையில் குறி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தார். ஆனால் கேமராவை அழுத்துவதற்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தினார். இதனால் துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்து அவரது தலையில் பாய்ந்தது.
துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மிதந்த போத்தல் ஒன்றிற்குள் செய்தியுடன் அஸ்தி.
வன்கூவர்,விக்டோரியாவில் உள்ள உள் துறைமுகம் ஒன்றில் போத்தல் மிதந்து வந்ததை துடுப்பாளர்கள் சிலர் கண்டுள்ளனர். அந்த போத்திலிற்குள் மனித உடல் தகனம் செய்யப்பட்ட அஸ்தி போன்ற சாம்பலும் பேப்பர் துண்டொன்றில் எழுதப்பட்ட செய்தியும் இருந்துள்ளது. “இந்த போத்தலை நீங்கள் கண்டால் தயவு செய்து திரும்பவும் தண்ணீருக்குள் எறிந்து விடவும். உலகத்தை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை”. என பேப்பரில் எழுதி இருந்ததாக இதை கண்டு பிடித்த ஆறு பேர்கள் கொண்ட Soggy Beavers படகு அணியை சேர்ந்த கிரஹாம் ஹென்றி கூறினார். இக்குழுவினர் இந்த செய்திக்கு மதிப்பு கொடுக்க விரும்பினர். இந்த துறைமுகத்திலேயே விட்டால் இதை அனுப்பியவரால் உலகின் பெரும் பகுதியை பார்க்க முடியாதென கருதினர். எதிர்வரும் யூன் மாதம் வாசிங்டன் போட் ரவுன்சென்டில் இருந்து கெற்சிகன் அலாஸ்காவிற்கு இக்குழுவினர் 1,200கிலோ மீற்றர்கள் படகோட்ட போட்டி ஒன்றிற்கு செல்ல உள்ளனர். அப்போது இந்த போத்தலையும் தங்களுடன் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர். இதனால் அஸ்தி அலாஸ்காவிற்கும் செல்லும். மனிதனின் எண்ணப்படி போத்தல் பசுபிக் சமுத்திரத்தின் வடக்கு நோக்கி நெடுந்தூரத்தில் போடப்பட்டால் நீரோட்டங்கள் ஆசியா வரையும் எடுத்துச் செல்லும்.