அழகிய புகைப்படம் எடுக்கப்பட்ட ஆசைப்பட்ட பெண்: உடல் கருகிய பரிதாபம்
18 May,2015
புகைப்படம் எடுக்கப்பட்ட ஆசைப்பட்ட பெண்: உடல் கருகிய பரிதாபம்
பிரித்தானியாவில் செல்பி எடுக்க ஆசைப்பட்ட பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவில் வசித்து வரும் ரோமானிய இளம் பெண் அன்னா உர்சு(Anna Ursu Age – 18) என்பவர், சமூக வளைதளத்தில் தனது வித்தியாசமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.
இதனால் புகைப்படம் எடுப்பதற்காக தனது 17 வயது நண்பனுடன், கடந்த 12ம் திகதி, வடக்கு பிரித்தானியாவின் லாசி(Lasi) நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ரயிலின் மீது இருவரும் ஏறி செல்பி எடுக்க முற்பட்டனர், அப்போது ரயிலின் மேற்பகுதியில் இருந்த 27 ஆயிரம் வோல்ட் உயர் அழுத்த மின் கேபிளை, இருவரும் தெரியாமல் தொட்டு விட்டனர்.
இதனால் மின்சாரம் தாக்கியதில் அன்னாவின் உடல் 50 சதவீதம் கருகியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்னாவின், நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.