இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.
14 Sep,2017
15 sep 2017 இனியமண நல் வாழ்த்துக்கள்
திருமண நாள் வாழ்த்து
என் வாழ்வின் இருண்ட சாலைக்கு ஒளித்தடம்
உருகிய உள்ளம் கொண்ட
இன்ப வெள்ளம் கண்ட
மதிக்கு,
திருமண வாழ்த்து
இருமனம் இணையா
திருமணம் நடந்து
காலம் பல கடந்து
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து
வாழ்ந்து காட்டி - காட்டிய
நீங்கள்தான் ந(வ)ல்லவர் !
விட்டு கொடுப்பவன் - என்றும்
கெட்டு போவதில்லை என்பதற்கு
நீங்கள்தான் -அதற்கு சாட்சி
நாங்கள் நேரில் கண்ட காட்சி .
நீங்கள் ஆளுகின்ற ஆட்சி !
வாழுங்கள் பல்லாண்டு
இவையகம் உள்ளவரை !
மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர
வேண்டும் வேண்டும் என்று -
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு .
இருவரும்
செந்தமிழ் போல்
பைந்தமிழ் போல்
பல்லாண்டு பல்லாண்டு
வாழ்க .
அன்புடன் .
தமிழ் ராஜ்
15 sep 2015 இனியமண நல் வாழ்த்துக்கள்.
தங்களின் உள்ளத்தின் அழகை மனமுருக வெளிக்காட்டி விட்டீர்கள்
எதையும் விந்தையாக செய்யும்
அதிசய உலகம் ..!!
விளங்கியும் விளங்காத
மானிடம்ஸ!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ..
நொந்துபோய் வெந்து
வீழ்ந்து விடாதே .!!
tamil raj
ஹா..ஹா..ஹா.. .. நல்லவேளை பெயர் போட்டீங்க இல்லாட்டில் மதி பயந்திருப்பா...
sep 2014
வாழ்வில் அனைத்து இன்பங்களும் நலமும் பெற்று பல்லாண்டு இன்புற்று நீவீர் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
பொறுமை என்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்"
பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்
இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
வருந்தி மிக ஆடினாள் ஆடினால் ஆடிப்
பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்
கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
நாடி மணந்த நாதனோடு ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நல்லறமாகிய இல்லற வாழ்வினில்
எல்லையில்லாத பேரின்பமடைந்திட
2013
பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பல நூறு ஆண்டுகள் நிலைக்க வேண்டும் இந்த சொந்தம்
அட்சதை தூவியும்
வாழ்த்துகள் பாடியும்
வாழை இலையில் பரிமாறியும்
வம்சங்களை கூட்டியும்
அற்புத கோலமாய்
நடந்ததல்லவோ இந்த திருமணம்!
53 தொட்டவுடன்
இருதயம் கூட புதுபித்ததாய் தோன்றுகிறது!
இனியவள் கன்னத்தில் இடித்தது கூட...
இன்னும் இனித்து கொண்டு தானே இருக்கிறது!
ருசியும், அழகும், ஆர்வமும்
இன் நினைவும்
கோடி முறை தொட்டு சென்று போயிருந்தாலும்..
திருமண நாள் - என்ற அந்த ஒரு நாள்
திடீர் என்று நினைவை தொட்டு செல்லும் போது!...
ஏனோ...வந்துவிடுகிறது...
அதே பழைய வெட்கம்!
ஆசை மனைவி.
அன்பு மகன்...
நேசத்துக்கும் பாசத்துக்கும் ..
பஞ்சமில்லா இந்த வாழ்கை வாழ..
யாருக்கு தான் வெறுத்து போகும்!
மனதார கோடி முறை
திருமண நாள் வாழ்த்துக்கள்!
Tamilraj
2013
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
தமிழர் குடும்பத்தில்
தலைமகனாய்ப் பிறந்ததனால்
ஆசைக் கனவெல்லாம்
ஆகாயக் கோட்டையாச்சு
பலலட்சம் சொத்துள்ள
பணக்காரி என்மனைவி
வளமான குடும்பத்தின்
வாரீசாம் என்மனைவி
பணத்திற்கு மட்டுமல்ல
பகட்டிற்கும் குறைவில்லை
செல்வத்தில் மட்டமல்ல
செருக்கிற்கும் குறைவில்லை
கணவனென்னை மதிக்கவில்லை
கர்வத்தால் மிதிக்கின்றாள்
புருசனென்று பார்க்கவில்லை
புல்லென்று தூற்றுகின்றாள்
விலைபோன காரணத்தால்
விதியைநொந்து நிற்கின்றேன்
தீனி போடமட்டும்
திறக்கின்றேன் என்வாயை
என்கதையைக் கேட்டதுமே
எதற்காக அழுகின்றீர்
என்னைப்போல் வாழ்விழந்தோர்
ஏராளம் இவ்வுலகில்
raj tamil
2012
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இறைவன் வகுத்த பந்தத்தில் இருமனம் இணைந்து ஒருமனதாகி திருமணமாகும் நல்ல திருநாளில் அன்புக்கு இனிய அக்கா,அத்தான் இருவருக்கும் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.
நயினை நாகபூஷணி அன்னையின் ஆசியுடன் பல்வேறு செல்வங்களும் பெற்று நல்ல நிலைதனில் நலமாய் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ மனதார வாழ்த்துகின்றேன்.
வாழ்க வளமுடன்
raj tamil
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
இன்று திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் .
புது இல்லத்தில் புது மணமகளாய் அடி எதுத்து வைக்கும் என் குல விளக்கே
.
அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .
எப்பவும் சந்தோசமா இரு .
இனி உன்னில் பாதிய இருக்க போற உன் கணவர் கிட்ட அன்பா இரு .
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத .
கணவரோட அம்மாவ உன் அம்மாவ நினசிகோ பெரியவங்க கிட்ட மரியாதைய நடந்துக்கோ . உன் நாத்தனார் கிட்ட ஒரு தோழி போல நடந்துக்கோ .எப்பொழுதும் கவலை இல்லாமல் சந்தோசமா இரு
மற்றவை நேரில்
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் மாந்தர்களும் வாழ்த்துவர்
உன் தோழியான நானும் வாழ்த்துவேன் என் தோழைமையான என் ப்லோக் உலக நண்பர்களும் உன்னை வாழ்த்த
வாழ்க நிவீர் பல்லாண்டு பல்லாய்ரத்தாண்டு என்று இந்த உலகும் உன்னை வாழ்த்தும்
raj tamil