இஸ்ரேலில் பேருந்தில் பயணிகளை சரமாரியாக குத்திக்கொன்று தீவிரவாத தாக்குதல் .
22 Jan,2015
.
இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் (Tel Aviv) நகரத்தில் நேற்று ஓடும் பேருந்து ஒன்றில், திடீரென புகுந்த அரபு நாட்டை சேர்ந்த வாலிபர் (23) ஒருவர் 9 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து பேருந்திலிருந்து தப்பி ஓடி முயன்ற இந்நபர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஆனால் அந்நபர் சிறு படுகாயத்துடையுடன் உயிர்தப்பியுள்ளார். இவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முறையான விசா இல்லாமல் இஸ்ரேலில் தங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே இவரது செயலை வீரச் செயல் என பாராட்டிய ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீனத்தை ஆக்கறமித்த இஸ்ரேலுக்கு இது சரியான பதிலடி என கூறியுள்ளது.