‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர் (வயது 84) அவர்க ளுக்கு பாலசந்தருக்கு அண்மையில்
திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சி யாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த திங்கள்கிழமை அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, நடிக ர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மருத்துவ மனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர் ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர் கள் மருத்துவ மனைக்குச் சென்று நலம் விசாரித்து வந் தனர். அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மருத்து வமனையிலேயே நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது
இயக்குநர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய சிறு குறிப்பு
1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பால சந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந் தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார்.
அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார். அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர்கதை, வறு மையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய்.
இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அபூர் வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறி முகப் படுத்தியதும் இயக்குநர் K. பாலசந்தர் தான். நடிகர் கமலஹாசன் புகழ் பெறுவதற் கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர் தான். அத்துடன் S.Ve.சேகர், மெளலி, Y.G. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜா தா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய வர் பாலசந்தர்.
மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடி த்த படம் கமல ஹாசனின் உத்தம வில்லன். விரைவி ல் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர்.
1987ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண் டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற் றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்.
ஒப்பற்ற அந்த மாமனிதனின் இழப்பு ஈடு செய்ய முடி யாதது. அவரது பாதங்களுக்கு தமிழ் செய்திகள் .cc தனது அஞ்சலியை செலுத்துகிறது.